நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மலையாள நடிகர்களில் தங்களது படத்தின் 2-ஆம் பாகங்களில் அதிகம் நடிப்பவர் யாரென்றால் அது நடிகர் ஜெயசூர்யா தான். அந்த வகையில் கடந்த 2013ல் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஜெயசூர்யா நடித்து ஹிட்டான 'புண்யாலன் அகர்பத்தீஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வருடம் 'புண்யாலன் பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது,
அதேபோல 2015ல் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான 'ஆடு; ஒரு பீகர ஜீவியானு படம் சுமாரான வெற்றி பெற்றாலும் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஆடு-2' என்கிற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் செய்தனர். இந்தப்படமும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் 2016ல் ஜெயசூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான பிரேதம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரேதம்-2 என்கிற பெயரில் எடுக்கவுள்ளார்கள்.
முதல் பாகத்தில் டான் பாஸ்கோ என்கிற மனநல மருத்துவராக நடித்திருந்த ஜெயசூர்யா, ஆவியாக அலையும் கல்லூரி மாணவிக்கு தனது விசாரணை மூலம் ஜெயசூர்யா நீதி வாங்கித்தரும் விதமாக கதை அமைந்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் ஜெயசூர்யாவின் கேரக்டரை இன்னும் டெவலப் செய்துள்ளாராம் இயக்குனர் ரஞ்சித் ஷங்கர்.. ஆம்.. ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனரான அதே ரஞ்சித் ஷங்கர் தான்...