ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 2013 டிசம்பரில் மலையாள திரையுலகில் சுழன்றடித்த த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமை ஒரு இந்தியன் பிரணயகதா படத்தை தான் சேரும். பஹத் பாசில் - பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் இந்தப்படம் வெளியானது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்கள்..
இந்தப்படத்திற்கு ஞான் பிரகாசன் என டைட்ட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. வழக்கம்போல சத்யன் அந்திக்காடுவின் படங்களில் இருக்கும் அம்சங்கள் இதிலும் குறைவில்லாமல் இருக்குமாம். அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறாராம். அந்தவகையில் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு சத்யன் அந்திக்காடுவும் சீனிவாசனும் இணைகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.