ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை பார்வதியை பொறுத்தவரை தன் மனதில் பட்ட கருத்துக்களை அது சரியா தவறா என கூட பார்க்காமல் பளிச்சென பேசி விடுவார். இதனாலேயே சர்ச்சை நடிகைகள் பட்டியலில் நடிகை ரீமா கல்லிங்கலுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
மலையாள நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது, முக்கிய பொறுப்புக்கு தான் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் ஒரு சிலரால் தான் தடுக்கப்பட்டதாகவும் அவ்வப்போது சில பேட்டிகளில் கூறி வந்தார் பார்வதி.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லாலிடம் பார்வதி கூறியது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன்லால், பார்வதியை போட்டியிட வேண்டாம் என யார் தடுத்தது..? நான் இதை நம்பவில்லை.. அது உண்மையாக இருந்தால், சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் கலந்துகொண்டு, தன்னை யார் தடுத்தார்கள் என்பதை அவர் தைரியமாக கூறியிருக்கலாமே..? எங்களில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து விலகி இருப்போமே.. இப்போதும் கூட பார்வதி விரும்பினால் அவருக்கு பொறுப்புகள் தர தயாராக இருக்கிறோம்" என சற்று காட்டமாக கூறியுள்ளார் மோகன்லால்.