டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள திரையுலகில் முதன்மையான ஹீரோவாக இருந்தாலும் இத்தனை வருடங்களில் தற்போது தான் மலையாள நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுளார் நடிகர் மோகன்லால். அவர் தலைவராக பொறுப்பேற்ற முதல் பொதுக்குழுவிலேயே, நடிகர் சங்கத்தில் ஏற்கனவே விலக்கி வைக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது சர்ச்சையை எழுப்பியது.
இந்தநிலையில் சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில், "திலீப்பை சங்கத்தில் சேர்ப்பது என்பது நடிகர் சங்கத்திலுள்ள அனைவரும் ஒருமித்தமாக எடுத்த முடிவு என்றாலும், திலீப்பிற்கு சங்கத்திற்குள் மீண்டும் நுழைய விருப்பமில்லை என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.
மேலும், "சினிமா பெண்கள் நல அமைப்பினர் மீண்டும் நடிகர் சங்க நிர்வாகக்குழு கூட்ட வேண்டும் என வைத்த கோரிக்கையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதுமட்டுமல்ல நடிகர் சங்க நிர்வாகத்தில் பல விதிகளை மாற்ற அமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. இதற்கு முன் வகுக்கப்பட்ட விதிகள் 25 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை. அதை இந்த காலத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக இந்த சங்கத்தில் பெண்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் தரப்படும் விதமாக மாற்றப்பட வேண்டும்" என்றும் மோகன்லால் கூறியுள்ளார்.