ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
மலையாள திரையுலகில் பிருத்விராஜ் - இந்திரஜித் சகோதரர்கள் தனித்தனி ஹீரோக்களாக தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துள்ளார்கள். அவ்வப்போது நல்ல ஸ்க்ரிப்ட் கிடைக்கும் போது இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவும் செய்கிறார்கள். அப்படி இதுவரை 12 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த முறை ஒரு மாற்றமாக பிருத்விராஜ், முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் லூசிபர் படத்தில் இந்திரஜித்தும் நடிக்கவுள்ளார்.
மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு பிரபல கதாசிரியர் நடிகருமான முரளி கோபி கதை எழுதியுள்ளார். இவரும் இந்திரஜித்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கான கேரக்டரில் வலுவான அம்சங்களை சேர்த்து கதை எழுதியுள்ளாராம். மோகன்லாலுடன் பாபா கல்யாணி, ரசம் உள்ளிட்ட சில படங்களில் இந்திரஜித் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் இந்திரஜித் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.