அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
புலிமுருகன் பட இயக்குனரான வைசாக் அடுத்ததாக மம்முட்டியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் வேளையில் இறங்கியுள்ளார். இது ஏற்கனவே மம்முட்டி, பிருத்விராஜை வைத்து, அவர் இயக்கிய போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகம் தான். இந்த தகவல் ஏற்கனவே அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் பிருத்விராஜ் நடிக்க இருக்கிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
போக்கிரி ராஜா படத்தில் மம்முட்டியின் தம்பியாக நடித்திருந்தார் பிருத்விராஜ். அதனால் இந்த இரண்டாம் பாகத்திலும் அவர் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. அதற்கேற்ற மாதிரி கடந்த வருடம் மம்முட்டியின் பிறந்த நாள் அன்று, பிருத்விராஜ் தனது வாழ்த்து செய்தியில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் என கூறியிருந்தது, அவர் இந்த படத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.
இந்தப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள பிருத்விராஜ், ஆகஸ்ட்டில் தான் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்க ஆரம்பிக்கிறார். அதனால், அவர் போக்கிரி ராஜா-2 படத்தில் நடிப்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.