ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடித்த ஆடு படத்தின் இரண்டாம் பாகமாக 'ஆடு-2' வெளியாகி நூறு நாட்களை தொட்டது. இந்தப்படத்தை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் தொடர்ந்து மம்முட்டி நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'கோட்டயம் குஞ்சச்சன்' என்கிற படத்தின் இரண்டாம் பாகத்தை மம்முட்டியை வைத்தே இயக்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் மம்முட்டி இன்னும் ஒரு வருடத்திற்கு பிசியாக இருப்பார் என்பதால் அந்தப்படத்திற்கு முன்னதாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ள படத்தை இயக்க இருக்கிறாராம். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் முதன்முறையாக கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறாராம். தற்போது இந்தியில் சோயா பேக்டர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.