ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
கடந்த வருடம், மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதானார் நடிகர் திலீப். இந்த வழக்கில் சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்துள்ள நடிகர் திலீப், ஒரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் இந்த வழக்கிலிருந்து தன்னை முழுதும் வெளியே கொண்டுவர அல்லது தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
மேலும் இந்த வழக்கில் கேரள போலீசார் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள் என்றும், நடிகை கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட வீடியோவில் தனக்கு பல சந்தேகங்கள் இருப்பதாகவும் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார் திலீப்.
இந்தநிலையில் இந்த வழக்கு சரியான திசையில் செல்ல வேண்டுமென்றால் இதனை சிபிஐயை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.