‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஒரு காலத்தில் ஹிந்தித் திரையுலகத்தில் மணிரத்னத்திற்குப் பிறகு பேசப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. சமீபகாலங்களில் தெலுங்கில் எந்தப் படம் வெளிவந்தாலும் அதைக் கிண்டலடித்து டுவீட் போடுவது, அந்தப் படத்தில் நடித்த முன்னணி நடிகர்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பது என தேவையில்லாத பல விஷயங்களைச் செய்தார். இப்போது அவருடைய படத்தையே தேவையில்லாத படம் என தெலுங்கு ரசிகர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.
ராம்கோபால் வர்மா இயக்கத்தில், நாகார்ஜுனா, மைரா சரீன் மற்றும் பலர் நடித்து ஜுன் 1ம் தேதியன்று வெளிவந்த படம் 'ஆபீசர்'. படம் வெளியான முதல் நாளிலேயே இந்தப்படம் ஒரு 'பிளாப்' படம் என ரசிகர்கள் முத்திரை குத்திவிட்டார்கள். தியேட்டர் பக்கம் யாருமே வராததால் படம் படுதோல்வி என்று கூட சொல்ல முடியாமல் படு பயங்கரத் தோல்வியடைந்தது.
இப்படத்தின் மொத்த வசூல எவ்வளவு என்பது பற்றி இப்போதுதான் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் சேர்த்து இந்தப் படம் மொத்தமாக இரண்டு கோடி கூட வசூல் செய்யவில்லையாம். வெறும் 90 லட்சம் மட்டுமே ஷேர் ஆக வந்துள்ளது. நாகார்ஜுனா, ராம்கோபால் வர்மா ஆகியோரது படங்களிலேயே மிக மிக மோசமான வசூல், சமீப காலத் தெலுங்குப் படங்களில் மிக மிக மோசமான வசூல் என 'ஆபீசர்' படத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
ராம்கோபால் வர்மா இனிமேல் மற்ற படங்களைக் கிண்டலடிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்வது அவருக்கு நல்லது.