தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார் நடிகர் திலீப். தொடர்ந்து தனது படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் திலீப், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஓரிரு முறை சில நிகழ்சசிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில் நீதிமன்றத்தில் இரண்டு கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்திருந்தார் திலீப்.
அதில் தான் நடிக்கவுள்ள புரபெஷர் டிங்கன் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட, சில நிபந்தனைகளை தளர்த்தும் விதமாக வைக்கப்பட்ட கோரிக்கை மனுவும் ஒன்று. ஆனால் தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அந்த கோரிக்கை மனுவை நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார் திலீப்.