ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தை நட்சதிரமாக சினிமாவில் வலம் வந்தவர் ஷாம்லி. ஆனால் அவரால் ஹீரோயினாக ஜெயிக்க முடியவில்லை. அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன், கதையை மாற்றுங்க, கேரக்டரை சரி பண்ணுங்க, இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களை போடுவதால் இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்கவே தயங்கினார்கள்.
ஓயே என்ற தெலுங்கு படத்தின் முதன் முதலாக அறிமுகமானார். அதற்கு பிறகும் வாய்ப்பு கிடைக்காததால் சிங்கப்பூருக்கு படிக்கப்போனார். பிறகு திரும்பி வந்து வல்லியும் தெட்டி புல்லியும் தெட்டி என்ற மலையாளப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகும் சொந்த மொழியிலும் வாய்ப்புகள் இல்லை.
பிறகு ஒரு வழியாக தமிழில் வீர சிவாஜி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தார். அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. கடந்த 2 வருடங்களாக வீட்டில் இருந்தவர் இப்போது அம்மாம்கரிலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் நாக சவுரியாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சுமித்ரா, சிவாஜி ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர் சூர்யா இயக்கி உள்ளார். இந்தப் படமாவது வெற்றி பெற்று ஷாம்லிக்கு வாய்ப்புகள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.