ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எங்கேயும் எப்போதும் படத்தில் நாயகனாக நடித்த சர்வானந்தை ஞாபகம் இருக்கிறதா?. அந்தப் படத்திற்குப் பிறகு சேரன் இயக்கிய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்தார். அதன் பின் தமிழ்ப் பக்கமே வரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு இரண்டு, மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படங்களான ஷதாமனம் பவதி, மகானுபாவலு ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. தற்போது பாடி பாடி லேச்சே மனசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் தான் செய்த மிகப் பெரிய தவறு ஒன்றைப் பற்றிக் கூறியுள்ளார். “கோ அன்டே கோட்டி என்ற படத்தைத் தயாரித்தது தான் நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு. நடிகராக எனது பயணம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்த்து. ஆனால், அதீத நம்பிக்கையில் நான் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் அந்த தயாரிப்பில் இறக்கினேன். அப்படத்தின் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து நான் மீண்டும் வருவதற்கு 3 ஆண்டுகள் ஆனது,” என உண்மையைப் பேசியிருக்கிறார்.
வளரும் சமயத்தில் சொந்தப் படம் எடுத்து இருப்பதைத் தொலைப்பவர்களுக்கு ஏற்கெனவே பலர் உதாரணமாக இருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் சர்வானந்த்.