பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர் மீது பாலியல் குற்றசாட்டுகளை தொடர்ந்து கூறிவருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கு சினிமாவில் பாலியல் குற்றங்கள் என்ற தலைப்பில் ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தெலுங்கு இயக்குனார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நடிகையை படுக்கைக்கு அழைக்கிறவர்கள்தான். அவர்களின் பாலியல் தொல்லைகளை நடிகைகள் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தங்கள் வாய்ப்பு பறிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். எதிர்காலம் பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள். இந்த பயமே இயக்குனர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவில் ஒரு நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும்போதே அவர் தன் படுக்கையை பகிர்ந்து கொள்வாரா என்றுதான் பார்க்கிறார்கள்.
பாலியல் தொல்லை மட்டுமல்ல சம்பளத்திலும் நடிகைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்கள். நடிகர்களுக்கு 10 கோடி சம்பளம் கொடத்தால், நடிகைக்கு ஒரு கோடி கொடுக்க தயங்குகிறார்கள். இந்த வேற்றுமை களையப்பட வேண்டும். நடிகைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் குற்றம் புரிகிறவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். என்றார் ஸ்ரீரெட்டி.