‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சில வருடங்களுக்கு முன், அதாவது மலையாள நடிகர் பஹத் பாசில், தான் முன்னணி நடிகராக மாறுவதற்கு முன், கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் என்பவர் சொன்ன கதையில் ஹீரோவே இல்லாமல் படம் முழுக்க வில்லன் ஆதிக்கம் செய்யும் கேரக்டரை கேட்டு அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுதான் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய '22 பீமேல் கோட்டயம்' படம்.
அதை தொடர்ந்து இதே கதாசிரியரின் கைவண்ணத்தில் உருவான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் சூப்பர்ஹிட் வெற்றி சமீப வருடங்களாக சரிந்து கிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தியது. அதை தொடர்ந்து இதே ஷ்யாம் புஷ்கரன் கதை எழுதியுள்ள 'கும்பளாங்கி நைட்ஸ்' படத்தில் இளம் ஹீரோக்கள் தவிர வலுவான வில்லன் வேடம் ஒன்று இருந்தது..
பேச்சுவாக்கில் அந்த கேரக்டர் பற்றி சொன்னதும் வாய்ப்பை நழுவ விடாத பஹத் பாசில் தானாகவே அந்த வில்லன் கதாபாத்திரத்தை கேட்டு வங்கிக் கொண்டாராம். படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் மது.சி.நாராயணனுக்கு இப்போதே படம் வெற்றி பெற்ற திருப்தி ஏற்பட்டு விட்டதாம்.