தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் மனைவி சரிதா. இவர், தனது கணவர் நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்ல ஆடை வடிவமைப்பு ஸ்டுடியோ ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.
கடந்த ஆண்டு 'ஜெயசூர்யா நடித்த 'ஆடு-2' படத்தில் இரண்டு பக்கமும் பயன்படுத்தும் வடிவிலான கருப்பு - சிவப்பு வேட்டியை ஜெயசூர்யவுக்காக உருவாக்கினார் சரிதா. அந்த வேட்டி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.
தற்போது, 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் திருங்கையாக நடித்துள்ள ஜெயசூர்யா, பெரும்பாலான காட்சிகளில் சேலைகட்டித்தான் நடித்துள்ளாராம். இதிலும் அவரது மனைவி சரிதா தான் படம் முழுக்க இவருக்கு சேலை கட்டிவிட்டுள்ளாராம்.
இதில் புத்திசாலித்தனமாக தனது கணவர் சேலை அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களை விளம்பர ஹோர்டிங்குகளாக மாற்றி, நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்து தனது புடவை கலெக்சனுக்கு விளம்பரம் தேடி வருகிறார் சரிதா.