ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிட்டத்தட்ட தான் ஒரு மலையாள நடிகர் என்கிற அடையாளமே மாறிப்போய் தேசிய நடிகர்போல மாறிவிட்டார் துல்கர் சல்மான். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்துள்ள மகாநதி படத்தில் அவரது நடிப்பிற்காக தமிழ், தெலுங்கு என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதை தொடர்ந்து இந்தியில் அவர் நடித்துள்ள 'கர்வான்' என்கிற படம் ஆகஸ்ட்-1௦ஆம் தேதி வெளியாக இருக்கிறது..
இதுதவிர தற்போது தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இதனால் அவரது தாய்மொழியான மலையாளத்தில் ஒரு பெரிய இடைவெளி விழுந்ததுபோல தோற்றம் உருவாகிவிட்டது. இதனையடுத்து தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மலையாள படங்களில், வரும் ஜூன் முதல் நடிக்க ஆரம்பிக்கிறார் துல்கர் சல்மான்.. கடைசியாக அவர் நடித்த சி.ஐ.ஏ படம் கடந்த வருடம் மேமாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.