டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரள தியேட்டர்ஸ் எக்சிபிடர்ஸ் சங்க தலைவராக இருந்தவர் லிபர்டி பஷீர். அடிக்கடி தியேட்டர்களை போராட்டம் நடத்த வைத்து பலரின் அதிருப்தியை சம்பாதித்தவர். இவரை எதிர்த்து இரண்டு வருடங்களுக்கு முன் நடிகர் திலீப் புதிதாக சங்கம் ஆரம்பித்ததுடன், லிபர்ட்டி பஷீரையும் சங்கத்தில் இருந்து நீக்கினார். அதன்பின் லிபர்ட்டி பஷீரின் தியேட்டர்களுக்கு படங்களை கொடுப்பதையும் தடை செய்தார்.
இந்தநிலையில் தான் நடிகை வழக்கில் சிக்கிய நடிகர் திலீப், சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதில் லிபர்ட்டி பஷீர், தன் மீதுள்ள சொந்த பகையினால், இந்த வழக்கில் தனக்கு தொடர்பு உள்ளதாக கூறி, தேவையில்லாமல் தன்னைப்பற்றி பேசிவருவதாக குறிப்பிட்டிருந்தார் திலீப்..
இதை தொடர்ந்து இந்த விபரம் லிபர்ட்டி பஷீருக்கு தெரியவந்துள்ள நிலையில், திலீப் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமன்றத்தில் தன்னை பற்றி குறிப்பிட்டுள்ள கருத்துக்கு நடிகர் திலீப், மீடியா வாயிலாக மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும், அப்படி இல்லையென்றால் அவரிடம் ரூ.10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் லிபர்ட்டி பஷீர்.