அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் ஜெயராமின் மகனாக வாரிசு நடிகராக களம் இறங்கினாலும் கடந்த மூன்று வருடங்களில் காளிதாஸ் ஜெயராமல் இன்னும் ஒரு நல்ல அறிமுகத்தையே பெற முடியவில்லை.. தமிழில் அவர் அறிமுகப்படமாக நடித்த 'ஒருபக்க கதை' படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும், கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்தநிலையில் காளிதாஸுக்கு நல்ல நேரம் பிறந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.. ஆம் சில நாட்களுக்கு முன்புதான் அல்போன்ஸ் புத்ரன் தமிழில் இயக்கவுள்ள புதிய படத்தில் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. இப்போது இன்னும் ஒருபடி மேலான சந்தோஷமாக, பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் காளிதாஸ். இதை தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் காளிதாஸ்.
கடந்த ஜனவரியில் மோகன்லால் மகன் பிரணவை வைத்து ஆதி என்கிற நூறு நாள் படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப் தற்போது இந்தியில் இம்ரான் ஹாஸ்மியை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். காளிதாஸும் அல்போன்ஸ் புத்ரன் படத்தை முடித்ததும் இந்த வருட இறுதியில் ஜீத்து ஜோசப் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.