'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஜனவரி மாதம் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக அறிமுகமான 'ஆதி' படம் வெளியானது. ஜீத்து ஜோசப் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு அறிமுக நடிகரின் படம் வெளியாகி ஒரு மாதம் தாண்டி ஓடுவதே சிரமம் என்கிற நிலையில் தற்போது 1௦௦வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதுடன், 5௦ கோடி ரூபாய் வசூலையும் தாண்டி மலையாள திரையுலகையே வாய்பிளக்க வைத்துள்ளது 'ஆதி'.
துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகிய வாரிசு நடிகர்கள் அறிமுகமானபோது கூட இப்படி ஒரு அதிசயம் நடந்ததில்லை. ஆனால் மோகன்லால் மகன் பிரணவ் நடித்த 'ஆதி' அதை சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு அறிமுக ஹீரோவின் படம் 5௦ கோடி வசூலிப்பது என்கிற பெருமையை மலையாள திரையுலகிலேயே, ஏன் இந்திய திரையுலகிலேயே முதல் ஆளாக பிரணவ் மோகன்லால் தான் பெறுகிறார் என்றே சொல்லலாம்.