ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமந்தாவின் கேரியரில் ரங்கஸ்தலம் முக்கியமான படமாகி விட்டது. காரணம், அவர் திருமணத்திற்கு பிறகு நடித்த இந்த படம் ரூ. 150 கோடி வசூலை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால், சமந்தாவின் சினிமா பயணத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடந்தபோது உற்சாகமாக கலந்து கொண்டார் சமந்தா. விழாவில், மேடையில் பேசியவர்கள் சமந்தாவின் நடிப்பு குறித்து பெருமையாக பேசினர். அப்போது அவர்களைப்பார்த்து தனது இருக்கையில் அமர்ந்தபடியே இரண்டு கைகளையும் உயர்த்தி நமஸ்காரம் செய்து நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.
அதன்பிறகு தான் மேடையேறியபோதும் பெரிதாக பேசாமல், என்னைப்பற்றி எல்லோருமே பேசிவிட்டார்கள். நான் பேச ஒன்றுமே இல்லை என்று வெறும் நன்றி மட்டும் சொல்லிவிட்டு இறங்கிவிட்டாராம் சமந்தா.