'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் தேஜா இயக்கத்தில் தயாராகும் என்டிஆ¡¢ன் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி 2019ம் ஆண்டு சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. மேலும், இந்த படத்தில் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க இந்தி நடிகை வித்யாபாலனை அணுகினர். அதோடு, கெஸ்ட் ரோலாவே இடம்பெற்றிருந்த பசவதாரகம் வேடத்தை வித்யாபாலனுக்காக பெரிய கேரக்டராகவும் மாற்றினர். ஆனபோதும் கதை கேட்ட அவர் இதுவரை அப்படத்தில் நடிப்பது குறித்து சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பில்தான் வித்யாபாலன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். ஒருவேளை அப்போதுவரை அவர் என்டிஆர் படத்தில் தான் நடிப்பது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்தால், ரம்யாகிருஷ்ணன் போன்ற சீனியர் நடிகைகள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.