பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் முன்னணி ஹீரோ, முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் தமன்னாவின் ஆசையாக இருந்து வந்தது. ஆனால், பாகுபலி உள்ளிட்ட சில படங்களில் நடித்த பிறகு சிறந்த டெக்னீசியன்கள் இடம்பெறும் படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்து வந்தார் தமன்னா.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் கல்யாண் ராம் நடிக்கும் நா நுவ்வே என்ற படத்தில் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார் தமன்னா. இந்த படத்தில் நடிக்க முதலில் கால்சீட் கேட்டபோது சம்பள பிரச்சினை காரணமாக தட்டிக் கழித்து வந்த தமன்னா, அப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை அறிந்ததும் உடனே ஒப்பந்தமாகி விட்டார்.
அதோடு நேற்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தமன்னா, பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசைகளில் ஒன்றாக இருந்து வந்தது. அது இன்றைக்கு நிறைவேறியுள்ளது. அவரது ஒளிப்பதிவில் நடித்தது பெருமையாகவும், கெளரவமாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.