பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பஹத் பாசில் கதாநாயகனாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான படம் 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்'. இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிமிஷா சஜயன். இந்தப்படத்திற்கு முன்பே மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்த 'கேர் ஆப் சாயிராபானு' என்கிற படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் அவருடன் நட்பை தொடர்ந்து வருகிறார் நிமிஷா.
இந்தநிலையில் மோகன்லால் மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட நிமிஷா சஜயன், மஞ்சு வாரியரிடம் மோகன்லாலை சந்திக்க வேண்டும் என்கிற தனது நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்தினார். காரணம் நிமிஷா மோகன்லாலின் தீவிர ரசிகையாம்.
மஞ்சு வாரியரும் நிமிஷாவை வரவழைத்து மோகன்லாலுடன் சந்திக்க வைத்துள்ளார். கதாநாயகியாக தற்போது இரண்டு படங்களில் நடித்துவரும் நிமிஷா, மோகன்லால் முன் ஒரு ரசிகையாக மாறிப்போய் விட்டாராம். “அந்த தருணத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை” என்கிறார் சிலாகிப்புடன்.