மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தமிழ் சினிமாவைப்போல அவ்வளவு வீரியமாக மலையாள திரையுலகை பேய்ப்படங்கள் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் முற்றிலும் விலகிவிடவும் இல்லை. அந்தவகையில் கடந்த வருடம் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'எஸ்றா' படத்திற்கு பின்னர் வேறு எந்த ஹாரர் படமும் அங்கே வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது 'நீலி' என்கிற ஹாரர் படம் உருவாக இருக்கிறது. மம்தா மோகன்தாஸ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் அனூப் மேனன் ஹீரோவாக நடிக்கிறார். அல்தாப் ரஹ்மான் என்கிற அறிமுக இயக்குனர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
கள்ளியங்காட்டு நீலி என்கிற பேய் கதை கேரளாவில் ரொம்பவே பிரசித்தம். 1979ல் கூட இதேபெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது. இப்போது 'நீலி'யை கொஞ்சம் அப்டேட் பண்ணி ரசிகர்களை அலறவிட தயாராகி உள்ளனர்.