ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவை போல இல்லையென்றாலும் மலையாள சினிமாவிலும் அவ்வப்போது ஹிட் படங்களின் பார்ட்-2 எடுக்கும் வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நடிகர் ஜெயசூர்யா நடித்த ஆடு படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 'ஆடு-2' படம் வெளியாகி நூறு நாட்களை தொட்டுள்ளது.
இந்த இரண்டு பாகங்களையும் இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் இந்த நூறாவது நாள் விழாவில் மம்முட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 199௦ல் மம்முட்டி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'கோட்டயம் குஞ்சச்சன்' என்கிற படத்தின் இரண்டாம் பாகத்தை மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கவுள்ளாராம்.
முதல் பாகத்தில் கதாநாயகியாக பானுப்ரியா நடிக்க, டி.எஸ்.சுரேஷ்பாபு என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இப்போது மம்முட்டி இரண்டாம் பாகத்திற்கான கிரீன் சிக்னல் கொடுத்ததை தொடர்ந்தே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ்.