தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் பாலிவுட்டில் வெளியான 'நாம் ஷபானா' என்கிற படத்தில் பிரதான வில்லனாக இன்டர்நேஷனல் கிரிமினல் டோனி என்கிற கேரக்டரில் நடிகர் பிருத்விராஜ் நடித்திருந்தார். பிருத்விராஜ் ஹிந்தியில் நடித்த மூன்றாவது படமான இதை ஷிவம் நாயர் என்பவர் இயக்கியிருந்தார்.
இதையடுத்து ஷிவம் நாயர் மலையாளத்திலேயே நேரடியாக தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதில் கதாநாயகனாக பிருத்விராஜ் நடிக்க இருக்கிறார். 'நாம் ஷபானா' படத்தின்போதே இந்தப்படம் குறித்து இருவரும் பேசி முடிவெடுத்து விட்டார்களாம்.
தற்போது 'ஆடுஜீவிதம்' படத்தில் நடிக்க துவங்கியுள்ள பிருத்விராஜ், இந்தப்படத்தின் வெவ்வேறு கட்ட படப்பிடிப்புகளுக்கு இடையே 'நாம் ஷபானா' இயக்குனரின் படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.