சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சினிமாவில் படங்களை திரையுடுவதில் முக்கிய பங்கு வகிக்கும் க்யூப் மற்றும் யு எப் ஓ உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மார்ச்-1 முதல் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகங்களும் சேர்ந்து வேலைநிறுத்தத்தை துவங்க உள்ளன.
இதனால் மார்ச்-1 முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை. அதேசமயம் மலையாள திரையுலகம் மட்டும் இதிலிருந்து சற்றே விலகி, மார்ச்-1ஆம் தேதி மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது. ஆனால் வழக்கம்போல மார்ச்-2, 9 ஆகிய தேதிகளில் ஏற்கனவே திட்டமிட்டுள்ள படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.
இந்த முடிவால் ஜெயராமின் மகன் காளிதாஸ் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். மலையாளத்தில் அவர் அறிமுகமாகி நடித்துள்ள 'பூமரம்' படம் இரண்டு வருடங்களாக பல சிரமங்களை கடந்து வரும் மார்ச்-9ஆம் தேதி தான் ரிலீஸாக இருக்கிறது.
மலையாள திரையுலகம் ஒரு நாள் மட்டுமே அடையாள வேலைநிறுத்தம் செய்வதால் தனது படம் திட்டமிட்டபடி வெளியாகிவிடும் என மகிழ்ச்சியில் இருக்கிறாராம் காளிதாஸ் ஜெயராம்.