ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் நிவின்பாலி தற்போது நடித்துவரும் படம் 'காயங்குளம் கொச்சுன்னி'. பிரியா ஆனந்த் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த திருடன் 'காயம்குளம் கொச்சுண்ணி' கேரக்டரில் நிவின்பாலி நடிக்கிறார்.
இந்தப்படத்தில் இதிக்கரா பக்கி என்கிற முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். ராபின்ஹூட் பாணியில் கேரளாவில் உருவாகிய முதல் கொள்ளையன் என்றால் அது இதிக்கரா பக்கி தானாம். அதனால் தான் இந்த கேரக்டரில் மோகன்லால் நடிக்க வேண்டும் என இயக்குனர் கோரிக்கை வைக்க மோகன்லாலும் மறுக்காமல் ஒப்புக்கொண்டு விட்டார்.
ஏற்கனவே இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் நடந்துவிட்ட நிலையில் தற்போது மங்களூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இன்றுமுதல் மோகன்லால் கலந்து கொண்டுள்ளார். மோகன்லாலின் வரவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.