பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் மஸ்கட்டில் நடைபெற்ற தனியார் நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொண்டார் அதன் தென்னிந்திய விளம்பர தூதர்களில் ஒருவரான மஞ்சு வாரியர். மேலும் நடிகர்கள் பிரபு, நாகார்ஜுனா, சிவராஜ்குமார் ஆகியோருடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு திரும்பியபின், ஷாருக்கான் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.
“சினிமாவிலும் டிவியிலும் மட்டுமே பார்த்துவந்த ஷாருக்கானை இப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன்.. ஷாருக் எபெக்ட் என்பதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அன்றுதான் நேரில் உணர்ந்தேன். நான் உங்களுக்கு நெருக்கமானவளாக உணர்கிறேன். நீங்கள் பாடிய பாடலை புத்தாண்டு பரிசாக எடுத்துக்கொள்கிறேன்” என ஒரு ரசிகையின் பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.
இந்த நிகழ்வில் மஞ்சு வாரியாரை அருகில் வைத்துக்கொண்டு, ஷாருக்கான் தனது 'தில்வாலே துல்ஹானியா லி ஜயேங்கே' படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலை பாடியதுதான் மஞ்சுவின் இந்த பரவசத்துக்கு காரணம்.