ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி |

ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, பொம்மன் இரானி ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் நான்காம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் காரணமாக ரிலீஸ் தேதி தாமதமான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைசி கட்ட படப்பிடிப்பாக ஆறு நாட்கள் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
அந்த சமயத்தில் படப்பிடிப்பின் கடைசி நாளன்று நடிகர் சிரஞ்சீவியும், புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் சேர்ந்து பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளனர். அப்போது நடிகர் சிரஞ்சீவி, இயக்குனர் புச்சி பாபு சனாவிடம் "எனக்காக ராம்சரண் சைக்கிள் ஓட்டுவது போல ஒரு காட்சியை படமாக்குங்கள்" என்று ஜாலியாக ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.
இயக்குனர் புச்சி பாபு சனா, சுகுமாரின் சீடர் என்பதும், இந்த படத்தில் ஆரம்பம் முதல் கதை விவாதம் வரை சுகுமாரின் பங்களிப்பும் இதில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..