இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கொரோனா மூன்றாவது அலையில் மீனா, த்ரிஷா, சத்யராஜ், அருண்விஜய், மகேஷ்பாபு, ஷெரின் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல, மலையாள பட இயக்குநர் ப்ரியதர்ஷனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மம்முட்டி கூறுகையில், ‛தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்ட போதிலும், நேற்று எனக்கு கோவிட் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் தவிர, நான் நன்றாக இருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து கவனமாக இருங்கள்,' எனத் தெரிவித்துள்ளார்.