
புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 வருடம் கழித்து வெளியிடப்பட்ட பாடல்
பிப் 03, 2025
Advertisement
கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானாலும் தனது எளிமையான குணங்களால் ரசிகர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் கவர்ந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021 அக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதிலேயே அவர் இந்த உலகை விட்டு பிரிந்தது அவரது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீனே நீனே ராஜகுமாரா என்கிற அஞ்சலி பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பவன் பட் என்பவர் எழுத சுனில் கோஷி என்பவர் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பாடகர்கள் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
தற்போது அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீனே நீனே ராஜகுமாரா என்கிற அஞ்சலி பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பவன் பட் என்பவர் எழுத சுனில் கோஷி என்பவர் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பாடகர்கள் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!