
அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு
சென்னையைச் சேர்ந்த கேங்ஸ்டர் மயிலை சிவகுமாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. அனிருத் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வி.கிரியேஷன் சார்பில் எஸ்.தாணு தயாரிக்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 மாதமாக இரவில் மட்டும் நடந்து வருகிறது. இன்னும் இதன் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக இரவிலேயே படமாக்கப்பட இருக்கிறது. படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்புகள் பகல் காட்சிகளாக படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!