
24 ஆண்டுகளுக்குப் பிறகு சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி - ஷாம்லி
ஜூன் 07, 2024
Advertisement
கடந்த மாதத்தில் அஜித்தின் குட் பேக் அக்லி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றபோது அருகில் உள்ள ஸ்டுடியோவில் சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படப்பிடிப்பு நடைபெற்றது. இதை அறிந்த அஜித்குமார் அங்கு சென்று சிரஞ்சீவியை சந்தித்து நலம் விசாரித்தார். அது குறித்த புகைப்படங்கள் அப்போது வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் மனைவியான ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாம்லி அவர்களது சகோதரர் ரிச்சர்ட் ஆகிய மூன்று பேரும் சிரஞ்சீவியை நேரில் சந்தித்துள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஷாம்லி.
சிரஞ்சீவி - ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஜெகடேகா வீருது அதிலோக சுந்தரி என்ற தெலுங்கு படத்தில் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக தாங்கள் நடித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதோடு, சிரஞ்சீவி சாரின் அன்பு என்றும் மாறாதது என்றும் ஷாம்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் மனைவியான ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாம்லி அவர்களது சகோதரர் ரிச்சர்ட் ஆகிய மூன்று பேரும் சிரஞ்சீவியை நேரில் சந்தித்துள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஷாம்லி.
சிரஞ்சீவி - ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஜெகடேகா வீருது அதிலோக சுந்தரி என்ற தெலுங்கு படத்தில் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக தாங்கள் நடித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதோடு, சிரஞ்சீவி சாரின் அன்பு என்றும் மாறாதது என்றும் ஷாம்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!