
குறுகிய காலத்தில் கதையின் நாயகியான கிர்த்தி ஷெட்டி
டிச 08, 2021
Advertisement
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்தபடத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதன்பிறகு நானியுடன் ஷ்யாம் சிங்கராய், சுதீர்பாபுடன் ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பாளி, மிதுனுடன் மச்சர்ல நியோஜகவர்கம் மற்றும் லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படம் என நான்கு படங்களை கைவசம் வைத்தி ருக்கிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் நானி நடித்த மஜ்னு மற்றும் உய்யாலா ஜம்பாலா போன்ற படங்களை இயக்கிய விரிஞ்சி வர்மா அடுத்து தான் இயக்கும் படத்தில் கிர்த்தி ஷெட்டியை கதையின் நாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தபடத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக கிர்த்தி ஷெட்டிக்கு முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசியிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் தெலுங்கில் நானி நடித்த மஜ்னு மற்றும் உய்யாலா ஜம்பாலா போன்ற படங்களை இயக்கிய விரிஞ்சி வர்மா அடுத்து தான் இயக்கும் படத்தில் கிர்த்தி ஷெட்டியை கதையின் நாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தபடத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக கிர்த்தி ஷெட்டிக்கு முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசியிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!