
மகள் திருமணம் முடிந்த கையோடு பாக்யராஜ் குடும்பத்திற்கு குஷ்பு - சுந்தர் சி ஆறுதல்
மகள் திருமணத்தால் பாக்யராஜ் மறைவுக்கு குஷ்பு, சுந்தர் சி தம்பதியர் வர முடியவில்லை. இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய இந்த தம்பதியர் பாக்யராஜ் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மருமகள் கிகி எனும் கீர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
சூர்யா, லெஜண்ட் சரவணன் அஞ்சலி
இதேப்போல் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, லெஜண்ட் சரவணன், நடிகை அதுல்யா ரவி உள்ளிட்டவர்கள் வெளியூரில் இருந்ததால் இறுதிசடங்கு நிகழ்வுகள் முடிந்த பின்னர் பாக்யராஜ் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!