
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது : டில்லி ஐகோர்ட் மீண்டும் அதிரடி
இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த இளையராஜா. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களுக்கு இசையமைக்கிறார். இவரது பாடல்கள் பல ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இதனால் காப்பி ரைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் வருகின்றன.
இந்நிலையில் சரிகம நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தது. அதில் 1976 முதல் 2001 வரை பல்வேறு காலகட்டங்களில் பல தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமையை சட்டப்படி பெற்றிருந்தோம். ஆனால் இளையராஜா அந்த பாடல்களை தன் சொந்தப் பாடல்கள் எனக்கூறி பிற ஆன்லைன் தளங்களில் பதிவேற்றியுள்ளார். எங்கள் நிறுவனத்தின் பாடல்கள், இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இதில் சரிகம நிறுவனத்தின் வசம் உள்ள 134 திரைப்படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ , அவற்றுக்கு உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என டில்லி ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதை நீக்க வேண்டும் என இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தடையை நீக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது.
‛‛அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜ பார்வை, நெற்றிக்கண்"" உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ உரிமம் பெறவோ உரிமை இல்லை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே ‛மூடு பனி" படத்தில் இடம்பெற்ற ‛என் இனிய பொன் நிலாவே..." பாடல் தொடர்பான ஒரு வழக்கில், ‛‛காப்பிரைட் சட்டப்படி ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது. இசை படைப்பில் பாடல் வரிகள் அல்லது ஒலிப்பதிவுகள் அடங்காது"" என டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்ஒரு பாட்டு உருவானது பல கலைஞர்களின் உழைப்பில், சில பாடல்கள் பாடல் ஆசிரியரால், சில பாடல் இசை அமைப்பாளரால், சிலபாடல் புல்லாங்குழல், ட்ரம் வாத்தியம், வயலின் வாத்தியம், மிருதரங்கம், சில பாடல்கள் நடிகர், நடிகைகளின் உழைப்பால் உருவாகும், ஒரு பாட்டை சுதந்திரமாக மற்றவர்கள் பாடணும், கேட்கணும், முன்பெல்லாம் இலங்கை வானொலி அதிகாலையில் இருந்தே தமிழ் சினிமா பாடல்கள் ஒளிபரப்பும், இந்திய தென்மாநிலங்களில் தெளிவாக மக்கள் கேட்டு மகிழ்வார்கள், அப்போது இளையராஜா இருந்திருந்தால் இலங்கை வானொலிக்கும் வழக்கு போட்டிருப்பார் பணம் கேட்டு, அந்த காலத்தில் தப்பிட்டோம்.
IJS is a Curse for Bharat