
பிரான்சில் ராஜமவுலிக்கு மீண்டும் ஒரு கவுரவம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜமவுலி ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, பிரான்சில் உள்ள சினிமா திரையரங்கு ஒன்றில் அவருடைய "ஈகா" திரைப்படம் திரையிடப்பட்டதுடன், அவரது பங்களிப்பை போற்றும் விதமாக அவருடைய பெயரில் ஒரு நிரந்தர இருக்கை ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு மேலும் கவுரவம் சேர்க்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் உள்ள புகழ்பெற்ற இன்ஸ்டிட்யூட் லூமியர் (Institut Lumière) அருங்காட்சியகத்தில் உள்ள திரைப்பட இயக்குனர்களின் சுவரில், உலக சினிமா ஜாம்பவான்களான குவென்டின் டோரான்டினோ, மார்ட்டின் ஸ்கோர்செசி, கிளின்ட் ஈஸ்ட்வுட் போன்றவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அந்தச் சுவரில் ராஜமவுலியின் பெயரும் நிரந்தரமாக பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கவுரவம் குறித்து ராஜமவுலி கூறும்போது, "இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது என்னை நெகிழ வைத்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்..




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!