Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜோ அச்சுதானந்தா (தெலுங்கு)

ஜோ அச்சுதானந்தா (தெலுங்கு),Jyo Achyutananda
  • ஜோ அச்சுதானந்தா (தெலுங்கு)
  • இயக்குனர்:
11 செப், 2016 - 16:19 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜோ அச்சுதானந்தா (தெலுங்கு)

நடிகர்கள் - நர ரோஹித், நாக சௌரியா

நாயகி - ரெஜினா

இயக்குனர் - ஸ்ரீநிவாஸ் அவசரலா


டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக உயர்ந்து வரும் நர ரோஹித், நாக சௌரியா இருவரும் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் அவசரலா இயக்கத்தில் இணைந்து நடித்திருக்கும் ஜோ அச்சுதானந்தா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்திருக்கின்றது.


அட்சுந்த்(ரோஹித்) மற்றும் ஆனந்த்(நாக சௌரியா) எனும் சகோதர்கள் இருவரும் ஏக புரிதலுடன் இணைபிரியாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படியான இவர்களது வாழ்க்கையில் ஜோட்ஸ்னா(ரெஜினா) எனும் பெண் நுழையும் போது அவர்கள் வாழ்வே தலைகீழாக மாறுகிறது. அண்ணன் தம்பி இருவரும் விழுந்து விழுந்து அவளை கவனிக்கிறார்கள்.


இப்படியாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில் நாயகி ஜோட்ஸ்னா போல் மேலும் ஒரு சம்பவம் அண்ணன் தம்பி இருவரின் உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. பிரியும் நிலைக்கு சகோதர்களைத் தள்ளும் காரணம் என்ன? அப்பிரச்சனையிலிருந்து இருவரும் விடுபட்டனரா? இறுதியில் நாயகி ஜோட்ஸ்னாவை கரம் பிடிப்பது யார் என்பதே இப்படத்தின் மீதிப்பாதி


இயக்குனர் ஸ்ரீநிவாஸ் அவசரலா தான் படத்தின் நாயகன் என்று யோசிக்காமல் சொல்லலாம், முதல் காட்சியில் இருந்தே அழகாக கதை சொல்ல துவங்கிவிடுகிறார். முழுக்க முழுக்க ரசிகர்களை கட்டிப்போடும் ஒரு நேர்த்தியான திரைக்கதை யுக்தியை கையாண்டிருக்கிறார் இயக்குனர்.


ஸ்ரீநிவாஸ் கதைக்கு கட்சித பொருத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்திருக்கிறார். நர ரோஹித் மற்றும் நாக சௌரியா இருவரும் பார்ப்பதற்கு உருவ ஒற்றுமையிலும் ஒன்று போல் இருக்கிற படியால் கதையுடன் நன்றாக பொருந்திப்போகிறார்கள். இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்நுள்ளது.


குறிப்பாக ரோஹித் அற்புதமான நடித்திருக்கிறார், அவரது படங்களில் இதை நிச்சயம் குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும். மறுபுறம் நாக சொளரியா உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதி முழுக்க நகைச்சுவை முக்கோண காதல் என சுற்றி சுழலும் கதை இரண்டாம் பாதியில் உணர்வு பூர்வமாக சென்று முடிவடைகிறது.


படத்தின் பிரச்சனை என்று பார்த்தால், இரண்டாம் பாதியில் வரும் சில பல தேவையில்லாத காட்சிகள் தான் அதை தவிர்த்திருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும். ரெஜினாவின் கதாபாத்திரத்தில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


கல்யான் கொடூரிதான் படத்திற்கு இசை. இவரது பின்னணி இசை பல காட்சிகளுக்கு உயிர் ஊற்றி உள்ளது என்பதை நிச்சயம் சொல்லியாக வேண்டும். ஹிட்டான டைடில் பாடலை பின்னணிக்கு மட்டும் பயன்படுத்தியிருப்பது ஏமாற்றமளிக்கின்றது. மற்றபடி இசையமைப்பாளர் கல்யாண் தனது பணியை சிறப்பாக செய்திருக்கின்றார். சரியான இடங்களில் வரும் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளன. எடிட்டிங் சுமார் ரகமே என்றாலும், இயக்குனரின் வசனங்கள் காட்சிகளை ஒரு படி உயர்த்திகாட்டுகின்றன.


காதல், சகோதரத்துவம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் என ரசிக்கும்படியான அழகான திரைப்படமாக ஜோ அச்சுதானந்தா படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார். உணர்வுபூர்வமான கதையை கையில் எடுத்து அதற்கு ரோஹித், நாக சௌரியா என சரியான நாயகர்களையும் இயக்குனர் தேர்வு செய்துள்ளார்.மொத்தமாக ஜோ அச்சுதானந்தா என்பது ஒரு காதல் படம் என்கிற எண்ணத்தை மறந்துவிட்டு வந்தால் நிச்சயம் ரசிக்கலாம்.




வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in