Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை

யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை,Yokiyan varran sembai ulle thokki vai
  • யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை
  • விஜய் R.நாகராஜ்
  • பிரியா மேனன்
14 ஏப், 2016 - 22:16 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை

யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ளவை - விமர்சனம்


காமெடி நடிகர் சிங்கம் புலியின் காமெடியே சில, பல படங்களில் கடியாக இருக்கும் எனும் நிலையில் அவரையே டைட்டில் நாயகனாக கொண்டு முற்றிலும் புதியவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கும் படமே யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ளவை திரைப்படம் !


அந்த காலத்து 18 பட்டி டைப்பில் இரண்டு வரப்பட்டி கிராமங்கள் அருகருகே இருக்கின்றன. இந்த இரண்டு பட்டி கிராமங்களும் ரெண்டு பட்டு கிடக்கிறது . ..இப் பட்டி நாட்டாமை களின் பர்ஸ்னல் பஞ்சாயத்துகளால் ... அது , என்ன பஞ்சாயத்து என்றால் ., எழுதவே கைகூசுகிறது. சொல்லவே வாய் கூசுகிறது... பார்க்க வே கண்கூசியது .... ( அதனால் படம் பார்க்க வந்திருந்த சிலரையும் வெயில் காலத்து ஏ-சி தியேட்டர் தூக்கத்தில் தள்ளியது தனிக்கதை....) .இருந்தாலும் கதை புரிய வேண்டுமென்பதற்காக ... ஒரு சில வரிகளில் சொல்வதென்றால் . இரண்டு ஊருக்கும் பொதுவான ஆற்றில் ஒரு ஊர் நாட்டமை ஆய் கழுவிய தண்ணீரை இந்த ஊர் நாட்டாமை அள்ளி குடித்து விடுகிறார் .அது பார்த்து அந்த ஊர் நாட்டாமை சிரிப்பாய் சிரிக்க . அதனால் இந்த ஊர் நாட்டாமையின் ஆட்கள் அவரை தூக்கி வந்து அவர் பின்புறத்தை நையப் புடைக்கின்றனர் . அது முதல் அவரை , இவரும் ., இவரை அவரும் பழி தீர்க்கும் வரை நாட்டாமைகளில் ஒருவர் வாய்க்கு ருசியாய் திடப்பொருளே சாப்பிடுவதில்லை ... என்று உதவியாளர்கள் கைங்கர்யத்தில் புனல் வைத்து ஆகாரத்தை கரைத்து ஊற்றி குடித்த படியும்., இன்னொருவர்., ஒட்டுத் துணி உடுத்துவதில்லை ... என , கம்பளி ஒன்றை போர்த்தியபடியும் அடிக்கும் கூத்தாவது பரவாயில்லை ...


நாட்டாமையின் மனைவி மார்கள் அடிக்கும் கூத்துகள் ... தன் கணவருக்காக ஒரு நாட்டாமையின் மனைவி ஜாக்கெட்டே போட்டுக்கொள்ள மாட்டேன் .. என்று கழட்டி போட்டுவிட்டு பாரதிராஜா பட நாயகியர் மாதிரி திரிவதும் ., இவராவது பரவாயில்லை ... எனும் ரீதியில் இன்னொரு நாட்டாமையின் மனைவி இனி , உள்பாவாடையே கட்டுவதில்லை .... என உருவி எறிந்து விட்டு திரிவதும் கொடூரம். இது மாதிரி நாட்டாமைகளின் பகையால் இரு பட்டிக்கும் பொதுவாக ஓடும் பஸ்ஸில் கூட இடையில் தடுப்பு வைத்து முன்புறம் ஒரு பட்டியினரும் , பின்புறம் ஒரு பட்டியினரும் ஏறி , இறங்குகின்றனர். இந்நிலையில் ஒரு நாள் முன்புற பேருந்தில் பிரயாணிக்கும் நாயகியை அதே பட்டியைச் சார்ந்த அடாவடி இளைஞர்கள் சிலர் ஈவ் டீசிங் செய்ய ., அதை பாய்ந்தோடி தட்டி கேட்கிறார் பேருந்து பின்புற பயணியான நாயகர். அது முதல் இருவருக்கும் காதல்!


அந்த கசிந்துருகும் காதலை இரு ஊர் பட்டிக்கும் பொதுவான பார்டர்இடத்தில் வீடு கட்டி பெரிய மனிதர் போர்வையில் வசிக்கும் சொம்பு திருட்டு பேர்வழியான சிங்கம் புலி சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். அதுவும் எப்படி ? தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமான அந்த நாட்டாமை மனைவியுடனான இந்த நாட்டாமையின் கள்ளக் காதலையும் ., இந்த நாட்டாமை மனைவியுடனான அந்த நாட்டாமையின் கள்ளக் காதலையும் இரண்டு பட்டி யிலும் பற்ற வைத்து விடுவேன் ... என பயமுறுத்தி இளம் காதல் ஜோடியை ஒன்று சேர்க்க படாதபாடு படுகிறார் சிங்கம் புலி....அவரது முயற்சி நாயகியின் மிலிட்டரி தாய் மாமனைத் தாண்டி நடந்தேறியதா ? இல்லையா ...? என்பதும் ., இரண்டு பட்டிகளும் ஒன்று சேர்ந்த தா ? இல்லையா ..? என்பதையும் கலந்து கட்டி வாய்வு தொல்லை , ஒன் பாத்ரூம் , டூ பாத்ரூம் போற பேச்சுக்கள் , காட்சிகள் எல்லாவற்றையும் கலந்து கட்டி நாற , நாற படம் பிடித்து காமெடி என்ற பெயரில் கடி ,கடியென்று கடித்திருக்கின்றனர்.


இளம் காதல் ஜோடிநட்சத்திரங்கள் இருவரும் புதுமுகம் எனும் அளவில் ஓ.கே.


போகும் இடங்களில் எல்லாம் பித்தளைசொம்பையும் , இன்னும் பிறவற்றையும் பதுக்கும் டைட்டில் நாயகர் சிங்கம் புலி , அதே மாதிரி இதில் காமெடி என்று தான் நினைத்து கடித்ததையும் பதுக்கியிருந்தால் ரசிகன் தப்பித்திருப்பான்.


சுப்புராஜ் ,விரல் சூப்பி .... ஒரு நாட்டமை கை தென்னரசு உள்ளிட்டவர்களில் தென்னரசு திகட்டவில்லை! புதுமுக நாட்டாமையும் வாயு தொல்லை காட்சிகள் தவிர்த்து பிறவற்றில் ஈர்க்கிறார்.


ஆதிஸ் உதயன் ,கிச்சா ஸ் வெண்ணிலா , சரவணன் , த்ரில்லர் முகேஷ் , தமிழ் குமரன் , இளைய குமரன் , கல்பனா , தவசிம்மன் ... என ஏகப்பட்ட யுவன் , யுவதிகள் இசை , ஒளிப்பதிவு ,படத் தொகுப்பு , கலை ,சண்டை பயிற்சி , நடனம் என உழைத்திருக்கின்றனர்.


கே.டி.எப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ் தயாரித்து வழங்க .,கிரிஸ்ட்டல் ஸ்டுடியோ வெளியிட்டிருக்கிறது ... அத்தனையும் சுவாமி ராஜாவின் இன் மெச்சூர்டு இயற்கை உபாதை , கண்றாவி கள்ளத்தொடர்புகதையால்... எழுத்து , இயக்கத்தால் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகி இருக்கிறது!


ஆக மொத்தத்தில் , யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ளவை - ரசிகன் வாரான் படச்சுருளை சுருட்டி வை எனும் அளவிலேயே இருக்கிறது. பாவம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in