Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ராகவன்

ராகவன்,
  • ராகவன்
  • விஜித்
  • ராதிகா மல்கோத்ரா
  • இயக்குனர்: பரந்தாமன்
30 ஜூன், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ராகவன்


தினமலர் விமர்சனம்


படி தாண்டினால் கட்டிய புருஷனே மனைவியை வெட்டி போடும் கிராமத்து கலாச்சாரத்திற்கும், நான், என் கேர்ள் பிரண்ட் கூட இருக்கிறேன்... நீ உன் பாய் பிரண்ட் கூட போ...! என்று மனைவியை மாற்றானுடன் அனுப்பி வைக்கும் நகரத்து நாகரீகத்திற்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையும், அவன் அதற்கு வழங்கும் தண்டனைகளும்தான் ராகவன் திரைப்படம்!

பள்ளி இறுதி ஆண்டில் நல்ல மதிப்பெண் பெறும் கிராமத்து இளைஞன் ஒருவன் மேல்படிப்பு படிக்க நகரத்திற்கு வருகிறான். வந்த இடத்தில் அவன் சந்திக்கும் நரக வாழ்க்கை அவனை படிப்பில் இருந்து பாதை மாற்றுகிறது. இவன் மீது அன்பு வைத்திருக்கும் வளரும் நடிகை ஒருவருக்கு விசுவாசி ஆகிறான். ஒரு பக்கம் தப்பு செய்யும் பெண்களை எல்லாம் தீர்த்துக் கட்டுகிறான். மற்றொரு பக்கம் அந்த நடிகை இவன் மீது வைத்திருக்கும் அன்பு காதலாகிறது. அந்த காதல் கசிந்து உருகுவதற்கு முன்பு காவல் துறை, இவன் செய்த கொலைகளுக்காக இவனை ‌தே‌ட ஆரம்பிக்கிறது. காவல் துறை கண்டுபிடித்ததா? காதல் கசிந்து உருகிறதா - இவனை காபந்து செய்ததா? என்பது ராகவன் படத்தின் வித்தியாசமான மீதிக்கதை!

கதையின் நாயகன் ராகவனாக புதுமுகம் விஜீத்! பார்க்க பாவமாக தெரிந்தாலும் படு சாமர்த்தியமாக பல கொலைகளை செய்கிறார். சில இடங்களில் படம் பார்ககும் ரசிகர்களையும் அப்படி (கொலை) செய்வதை தவிர்த்திருந்தால் முதல் படத்திலேயே முழுதாக ஜெயித்திருக்கலாம்.

படத்தில் நடிகை திவ்யாவாக வரும் அறிமுக நாயகி ராதிகா மல்ஹோத்ரா, கொழுக், மொழுக் கவர்ச்சி விருந்து படைத்து, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை உணர்த்தி இருக்கிறார்.

இந்த இருவருடன் மனோஜ் கே.ஜெயன், சஷி, மூணார் ரமேஷ் (பல காட்சிகளில் வெறும் புகைப்படமாக இருந்து..) ரிஷா ஆகியோரும் நடித்து படத்திற்கு வலு சேர்க்க முற்பட்டிருக்கின்றனர்.

நடிகைகளில் கூட நல்லவர்கள் உண்டு! ஐ.டி., பீல்டில் இருப்பவர்கள் ரொம்ப மோசம் என்று தான் சார்ந்திருக்கும் சினிமா பீல்டில் இருப்பவர்களுக்கும், தன்னை வளர்த்து விட்ட கிராமத்து கலாச்சாரத்திற்கும் வக்காலத்து வாங்க முற்பட்டிருக்கும் இயக்குனர் பரந்தாமன, கதையிலும், திரைக்கதையிலும் காட்டிய புதுமையை வசனங்களிலும், இயக்கத்திலும், காட்சியமைப்பிலும் காட்டாமல் விட்டது வருத்தம்!

ரகவன் : நல்லவன்தான்! ஆனால் ரசனைக்குரியவனா? இல்லையா.. என்பது ரசிகர்கள் கையில் உள்ளது.

------------------------------

கல்கி விமர்சனம்


இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி)  துறையில் வேலை செய்யும் இரவு நேர ஊழியர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் வரிசையாக. கொலையாளி யார் என்பதே படத்தின் கதை. கிராமப் பள்ளியில் படிக்கும் ராகவன், சிறந்த மாணவன் என பெய எடுக்கிறான். மோசமான குடும்பப் பின்னணியோடு, வறுமையும் துரத்த அப்பாவின்  அறிவுரையோடு நகரத்தில் இருக்கும் உறவினரைப் பார்க்க வருபவன், தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி கொலையாளியாகிறான். அவனுடைய ஐ.டி. கனவும் தகர்ந்து போக, தவறான வழியில் செல்லும் ஊழியர்களைத் தண்டிக்கிறான். இறுதியில் அவனது கனவு நிறைவேறியதா என்பதை இயக்குனர் பரந்தாமன், சொல்ல முன்  வந்திருக்கிறார்.

தியேட்டரில் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே, நமக்கு பரங்கிமலை ஜோதியும், கெயிட்டி தியேட்டரும் ஞாபகத்துக்கு வருவதைத்  தவிர்க்க முடியவில்லை. இயக்குனர் ஆபாசத்தின் எல்லையை அநாயசமாகத் தாண்டுகிறார். எல்லா துறைகளிலும் நல்லதும்,கெட்டதும் உண்டு. அது ஐ.டி.யிலும் நடக்கிறது. அதற்காக ஐ.டி.என்றாலே ஏதோ விபச்சார விடுதி போ ஒரு தோற்றத்தை  நமக்கு அளிக்க முன்வருகிற இயக்குனருக்கு,வெறும் ஏடுகளில் வந்த செய்திகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்திருக்கின்றன. இரவு முழுக்க கண் விழித்தும், கடுமையான வேலைப்பளுவோடும் தமது குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக  பணியாற்றும் இளைஞர், இளைஞிகள் அதிகம். பொருளாதாரத்துக்காக அவர்கள்படும் அவதியும், நெருக்கடிகளும் விரிவாக  அலசப்படவேண்டியவை. இயக்குனர் கள ஆய்வு செய்து படத்தை எடுக்காமல் விட்டதால் வெறும்  ஆபாசத்தோடு படம் தொக்கி நிற்கிறது.

ராகவன்  ரசனைக்கு அல்ல!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

ராகவன் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in