Live
கவிஞர் கண்ணதாசன் 93வது பிறந்தநாள் - இசைக்கவி இரமணன்
பயோகிராபி

Advertisement
- பெயர் : கண்ணதாசன்
- இயர்பெயர் : முத்தையா
- பிறந்ததேதி : 24-ஜூன்-1927
- பெற்றோர்கள் : சாத்தப்பன் - விசாலாட்சி
- உடன் பிறந்தவர்கள் : 8 சகோதர, சகோதரிகள்
- குடும்பம் : 2 மனைவி, 9 மகன்கள் மற்றும் 5 மகள்கள்
- படிப்பு : 8ம் வகுப்பு
- முதல் வேலை : அஜக்ஸ் கம்பெனி, திருவற்றியூர்
- எழுத்தாளர் : 1944ல் திருமகள் பத்திரிக்கை மற்றும் 1949ல் சண்டமாருதம் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.
- முதல் பாடல் : கலங்காதிரு மனமே... (படம் : கன்னியின் காதலி)
- முதல் பட வசனம் : இல்லற ஜோதி
- முதல் தேர்தல் அனுபவம் : 1957ல் திருக்கோஷ்டியூர் சட்டசபை தொகுதியில் தமிழ் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி
- முதல் தயாரிப்பு : மாலையிட்ட மங்கை 1957ம் ஆண்டு. கண்ணதாசன் புரொடக்சன்ஸ்
- விருதுகள் : சாகித்ய விருது, தேசிய விருது என பல பெருமைக்குரிய விருதுகள் பெற்றுள்ளார்
Advertisement
போட்டோ
கண்ணதாசன் அவர்களின் போட்டோ தொகுப்புகள்
சுவாரஸ்யங்கள்
கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள்
கவிஞர் கண்ணதாசன் முதன் முதலில் கதை வசனம் எழுதிய எம்.ஜி.ஆர் படம் "மதுரை வீரன்". படம் வெளியான ஆண்டு 1956.
"ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி பெறாத எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தார் என்றால், அடிமைத்தனம் வேரூன்றி கிடக்கும் உலகின் எந்த மூலையிலும், "கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை" "கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை" "அச்சம் இன்றி ஆடி பாட வேண்டும் விடுதலை" "அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை" என்று இவரிடம் இருந்து வந்த வார்த்தைகளேயன்றி வேறொன்றும் இல்லை.
Advertisement
அண்ணாத்துரை புற்று நோயால் அவதியுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை நலம் விசாரிக்கும் வகையில், அந்த ஆண்டு வெளிவந்த "தில்லான மோகனாம்பாள்" திரைப்படத்தில், நடிகை பத்மினி, காயமுற்ற சிவாஜியை நலம் விசாரிப்பது போல் அமைந்த காட்சியின் பாடலை கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு எழுதுகின்றார்."நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா நலம் பெற வேண்டும் நீ இன்று நாளும் என் நெஞ்சில நினைவுண்டு இலைமறை காய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று" என்று பல்லவியிலும் "கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்" என்று சரணத்திலும், அன்றைய தி மு க விலிருந்து விலகியிருந்த கவிஞர், ஒரு பாட்டின் வாயிலாக நலம் விசாரித்த அழகு இன்றும் அலாதியான ஒன்று.
திமுகவில் இருந்து விலகிய கவிஞர் கண்ணதாசன், காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பது போலும், காமராஜருக்கு தூது விடுவது போலவும், "பட்டணத்தில் பூதம்" திரைப்படத்தில் வரும் "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி" என்று சூசகமாக எழுதியிருப்பது தனி அழகு. காமராஜரின் தாயாரின் பெயர் "சிவகாமி அம்மாள்".
இறைவன் என்றால் யார்? அவர் எங்கு இருக்கின்றார்? இந்த கேள்விகளுக்கு கவிஞர் கண்ணதாசன் தனது பாணியில் ஒரு திரைப்பட பாடலில் இவ்வாறு கூறுகின்றார். "ஆண்டவன் கட்டளை" திரைப்படத்தில் வரும் "ஆறு மனமே ஆறு" என்ற பாடலில் "ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்". "அன்பு நன்றி கருணை கொள்பவன் மனித வடிவில் தெய்வம்" என்று நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வம் இருப்பதையும், மிருகம் இருப்பதையும் அறியும் வண்ணம் கூறிய மகா கவிஞன் கண்ணதாசன்.
"தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்" "தாய் தூங்க தாலாட்டு நீ பாட வேண்டும்" "நீ பாடும் தாலாட்டை தாய் கேட்க வேண்டும்" "தன் நிலை மாறி அவள் கூட மொழி பேச வேண்டும்" என்று வேறொரு படத்திற்கு கவிஞர் எழுதிய இந்த தாலாட்டுப் பாடல்தான் பின்னாளில் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" "நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்" என்ற காதல் பாடலாக கவிஞரால் உருமாறியது.
சொல்ல வந்த கருத்தை, சொல்ல வந்த விஷயத்தை, அலங்கார வார்த்தைகளன்றி மிக இயல்பாகவும், எளிமையாகவும் தமிழின் இனிமை குன்றாமல் ஆழமான பொருள் கொண்டு, பாமரன் முதல் படித்தவன்வரை சென்றடையும் வண்ணம் பாடல்கள் புனைவதில் கவிஞருக்கு இணை கவிஞரே.
ஒரே பாடலில் விரகதாபத்தையும், துறவறத்தையும் நியாயப்படுத்தும் வகையில் பாடல் எழுதுவதென்றால் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. "தரிசனம்" என்ற திரைப்படத்தில் வரும் "மாலை நேரத்து மயக்கம்" என்ற பாடலி;ல் கவிஞர் இவ்வாறு எழுதுகின்றார். "இது மாலை நேரத்து மயக்கம்" "பூ மாலை போல் உடல் மணக்கும்" "இதழ் மேலே இதழ் மோதும்" "அந்த இன்பம் தேடுது எனக்கும்" என்று பெண் தனது விரகதாபத்தை வெளிப்படுத்துவது போலவும், "இது காலதேவனின் கலக்கம்" "இதை காதல் என்பது பழக்கம்" "ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்" என்று ஆண் அதை மறுத்து துறவறத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இருவேறு எண்ணம் கொண்ட காதலன் காதலியின் நிலைப்பாட்டை பல்லவியிலேயே ஆணித்தரமாக சொல்ல முடியும் என்றால் அது கவிஞர் கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் இயலாது.
"பாவமன்னிப்பு" திரைப்படத்தில் நடிகர் சிவாஜி ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து, சந்தர்ப்பவசத்தால் சிறுவயதிலேயே ஒரு இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு, இளைஞனானபின் பாடுவதுபோல் ஒரு காட்சி. அக்காட்சிக்கு கவிஞர் எழுதிய பாடல் இது."எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்" அல்லாவின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்". வளர்ப்பால் இஸ்லாமியரான நடிகர் சிவாஜியின் கதாபாத்திரம், பிறப்பால் ஒரு இந்து என்பதால் அவரை அறியாமலேயே அவர் நாவில் ஓம்" என்று ஒலிப்பதாக பாடல் முழுவதும் ஓம் ஓம் ஓம் என்றே வருவது போல் அமைத்திருப்பது கவிஞர் கண்ணதாசனுக்கே உண்டான தனிச்சிறப்பு.
சினிமா உலகில் நுழைவது மிகக்கடினம். அவ்வாறு நுழைந்தாலும் ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பது மிக மிகக் கடினம். இந்த அனுபவம் கவிஞர் வாலியையும் விட்டு வைக்கவில்லை. சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு பண்ணிய கவிஞர் வாலி, "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா" என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை கேட்டு தனது முடிவை மாற்றி மீண்டும் முயற்ச்சித்ததாக அவரே சுவைபட குறிப்பிட்டுள்ளார்.
நான் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்" எகிப்திய இசையை கேட்டேன். "தென்றல் வந்து வீசாதோ" பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாசனையை கண்டேன். "அபூர்வ ராகத்தில்" நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ"வில் மெக்ஸிகன் இசையை கேட்டேன். உலகத்தில் உள்ள அனைத்து இசையும் அறிந்தவர் எம்எஸ் விஸ்வநாதன் என்று கண்ணதாசன் பெருமையாக கூறியிருந்தார்.
"கண்ணதாசன் எனக்கு கிடைத்திருக்காவிட்டால் நான் ஆர்மோனிய பெட்டியை தூக்கிக் கொண்டு கேரளாவுக்கு பாட்டு வாத்தியாராக போயிருப்பேன்" என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். "அடுத்த பிறவியில் நானும், விஸ்வநாதனும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்" என்பார் கண்ணதாசன். இருவருக்கும் அப்படி ஒரு நட்பு இருந்தது.
கல்லாக படுத்திருந்து களித்தவர் யாருமில்லை. கை, கால்கள் ஓய்ந்த பின்னே உழைப்பதில் லாபமில்லை என்று உழைப்பையும், பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணை அது, இருக்கின்ற பிடி சோறுதனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோயில் அது என்று தாய்மையையும் போற்றினார். அர்த்தமுள்ள இந்து மதத்தில் பாவ புண்ணியங்களை வலியுறுத்தி தவறு செய்வோர் தண்டனை அடைவர் என எடுத்துக்காட்டுகிறார்.
திருக்குறளின் தாக்கம் கம்பனிடத்திலும், கம்பனின் தாக்கம் கவிஞரிடத்திலும் காண முடியும். எதுகை மோனையில் கம்பனுக்கு இணையானவர் கவிஞர். கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு உறையூரின் காவலனே வாழிய நீடு என்றும், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்றும் எதுகை, மோனையில் எழுத்தாள்கிறார் கவிஞர்.
தான் சொந்த படம் எடுத்ததை பெரிய தவறாகவே கருதினார். மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, கறுப்புப் பணம், கவலையில்லாத மனிதன் ஆகிய படங்கள் வணிகரீதியாக வசூலைக் கொடுக்கவில்லை. கசப்பான அனுபவங்களை கற்றுத்தந்தன. கவலையில்லாத மனிதன் கவிஞரை கவலையுள்ள மனிதனாக்கின.
கால்ஷீட் வேண்டி ஒரு நடிகரின் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். இதோ வருகிறேன் என்று சொல்லி சென்ற அந்த நடிகர் வீட்டின் பின்வாசல் வழியாக சொல்லாமலேயே சென்றுவிட்டார். இதையறிந்த கவிஞர் அந்த படத்தில், பிறக்கும்போதும் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான் என்ற பாடலை எழுதி அந்த நடிகரையே பாட வைத்தார்.
1962ல் திருக்கோஷ்டியூர் தொகுதியில் தமிழ் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் சட்டசபையில் இடம் கிடைக்கவில்லை. அதே ஆண்டில் அன்னை படத்தில், புத்தியுள்ள மனிதரெல்லாம், வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற கவிஞரது பாடல் இடம் பெற்றது.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.
பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார். ”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.
பல ஆயிரம் பாடல்கள் எழுதிய கண்ணதாசன், பல தத்துவ நூல்களை எழுதிய கண்ணதாசன் பேனா பிடித்து எழுத மாட்டார். சினிமாவுக்கு பாடல் எழுதும்போது நேராக எம்.எஸ்.விஸ்வநாதனின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு செல்வார். ஆர்மோனிய பெட்டி சகிதமாக விஸ்வநாதன் அமர்ந்திருப்பார். அருகில் படத்தின் இயக்குனர் அமர்ந்திருப்பார். கண்ணதாசன் நேராக சென்று ஆர்மோனிய பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொள்வார்.இயக்குனர் காட்சிக்காக சூழலை சொல்வார். எம்.எஸ்.விஸ்வாதன் மெட்டை இசைத்து காட்டுவார். உடனே கண்ணதாசன் பாடல் வரிகளை சொல்வார். அதனை அருகில் இருக்கும் உதவியாளர்கள் எழுதிக் கொள்வார்கள். மெட்டுக்குள் சிக்காத சில வார்த்தைகளை மாற்றுமாறு விஸ்வநாதன் சொல்வார், அதை மாற்றிச் சொல்வார் கண்ணதாசன். அதை உதவியாளர் திருத்தி எழுதிக் கொள்வார். எல்லாம் முடிந்த பிறகு உதவியாளர் எழுதிய பாடல் வரிகளை ஒரு முறை படித்து பார்த்துவிட்டு "வரட்டுமா விசு" என்றபடியே எழுந்து போய்விடுவார். அத்தனையும் 30 நிமிடத்துக்குள் முடியும். கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை இப்படித்தான் எழுதுவார்.
'கருப்பு பணம், ரத்த திலகம், சூர்யகாந்தி, அபூர்வ ராகங்கள்' ஆகிய படங்களில் ஒரு நடிகனாகவும் தன்னை நிரூபித்தார் கண்ணதாசன்.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அவரே வாயசைத்து பாடிய பாடல்கள் : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்(கருப்பு பணம்), ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு(ரத்த திலகம்), பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது(சூர்யகாந்தி).
வரலாறு

Advertisement
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பிறந்தவர் கவிஞர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். இருபதாம் நுாற்றாண்டு கவிதை உலகில் பாரதியார், பாரதிதாசன் இருவரையும் தொடர்ந்து கவிஞர் கண்ணதாசனுக்கு நிலையான ஓர் இடம் உண்டு.
துவக்கத்தில், திராவிடர் கழகத்தில் இருந்த கண்ணதாசன், 1961ல், கருத்து வேறுபாட்டால் வெளியேறினார். துவக்கத்தில் பத்திரிகை ஆசிரியராக தடம் பதித்தவர், பிறகு நடிக்கவே ஆசைப்பட்டார். நடக்கவில்லை என்றதும், வசனம் எழுதுகிறேன் என்றார். 'இங்கே அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள், வேண்டுமானால் பாடல் எழுதுகிறாயா' என்றார், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம். மறுகணமே, கன்னியின் காதலி படத்திற்காக, 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்று தனது 21 வயதில் பாடல் எழுதி கொடுத்தார். பின்னர் பாடல் எழுதுவதில் முதல்வருமாகி, முடிசூடா மன்னருமானார்.
கவிஞரது எழுத்து அவரது தலையெழுத்தை மாற்றியது. துவக்கத்தில் கூட்டத்தோடு பாடல் எழுதியவர், படத்தின் அனைத்து பாடல்களையும் ஒருவரே எழுதும் நிலைக்கு உயர்ந்தார். திரைப்படம் சொல்ல வேண்டியதையும், சொல்ல தவறியதையும் இவரது பாடல்கள் சொல்லின. கதையின் கருவை மெருகுடன் இவரது பாடல்கள் சுட்டின. சமூக பாடல்களைப் போல சரித்திர, புராண, பக்தி பாடல்கள் எழுதுவது எளிதல்ல. இவரின் மகாகவி காளிதாஸ், கர்ணன், திருவிளையாடல் பட பாடல்களை யாரால் மறக்க முடியும்.வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சிவந்தமண்ணிற்கும், நம் சிவகங்கை சீமைக்கும் பாடல் எழுதினார். இரண்டிலும் மண் வாடையை நன்றாக வேறுபடுத்தினார். மலையிலிருந்து தண்ணீர் அருவியாக விழுவதைப்போல், கவிஞரது மூளையிலிருந்து தமிழ் அமுதாக கொட்டியது.
திரைப்படப் பாடல்களாக இருந்தாலும், தனிக்கவிதைகளாக இருந்தாலும், அத்தனையும் முக்கனிச் சுவையே. 1962ல் திருக்கோஷ்டியூர் தொகுதியில் தமிழ் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் சட்டசபையில் இடம் கிடைக்கவில்லை. அதே ஆண்டில் அன்னை படத்தில், 'புத்தியுள்ள மனிதரெல்லாம், வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை' என்ற கவிஞரது பாடல் இடம் பெற்றது. கவிஞர்கள் உள்ளம் என்றும் ஒரு உண்மை உரைக்கும் கருவி. அதுவே அரசியல் களத்தின் வெற்றியை பாதித்ததாக கூறுவர்.
பொழுது போக்கிற்கானது திரைப்படம் என்பதை தன் பாடல்களால் பொருள் நிறைந்ததாக மாற்றினார். அனைத்து மத கடவுள்கள், சரித்திர நாயகர்கள், புராண இதிகாச வேந்தர்கள், மாந்தர்களை இவரது பாடல்கள் நம் கண் முன் கொண்டு வந்தன. எம்.எஸ்.விஸ்வநாதன் நாதம் என்றால், கண்ணதாசன் கீதம். கே.வி.மகாதேவன் தேவராகம் என்றால், கண்ணதாசன் தேவகானம். இம்மூவேந்தர்களின் காலம் தமிழ் திரைக்கு மட்டுமல்ல; தமிழ் மொழியின் பொற்காலமும் கூட. மான், மலர், மங்கை, மாலை, மதுரை, தென்றல் போன்ற சொற்களை அதிகம் பயன்படுத்தியுள்ளார் கவிஞர்.
தான் சொந்த படம் எடுத்ததை பெரிய தவறாகவே கருதினார். மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, கறுப்புப் பணம், கவலையில்லாத மனிதன் ஆகிய படங்கள் வணிகரீதியாக வசூலைக் கொடுக்கவில்லை. கசப்பான அனுபவங்களை கற்றுத்தந்தன. கவலையில்லாத மனிதன் கவிஞரை கவலையுள்ள மனிதனாக்கின. 'கால்ஷீட்' வேண்டி ஒரு நடிகரின் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். இதோ வருகிறேன் என்று சொல்லி சென்ற அந்த நடிகர் வீட்டின் பின்வாசல் வழியாக சொல்லாமலேயே சென்றுவிட்டார். இதையறிந்த கவிஞர் அந்த படத்தில், 'பிறக்கும்போதும் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான்' என்ற பாடலை எழுதி அந்த நடிகரையே பாட வைத்தார்.
'கல்லாக படுத்திருந்து களித்தவர் யாருமில்லை. கை, கால்கள் ஓய்ந்த பின்னே உழைப்பதில் லாபமில்லை' என்று உழைப்பையும், 'பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணை அது, இருக்கின்ற பிடி சோறுதனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோயில் அது' என்று தாய்மையையும் போற்றினார். அர்த்தமுள்ள இந்து மதத்தில் பாவ புண்ணியங்களை வலியுறுத்தி தவறு செய்வோர் தண்டனை அடைவர் என எடுத்துக்காட்டுகிறார்.
திருக்குறளின் தாக்கம் கம்பனிடத்திலும், கம்பனின் தாக்கம் கவிஞரிடத்திலும் காண முடியும். எதுகை மோனையில் கம்பனுக்கு இணையானவர் கவிஞர். ''கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு உறையூரின் காவலனே வாழிய நீடு'' என்றும், ''புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்'' என்றும் எதுகை, மோனையில் எழுத்தாள்கிறார் கவிஞர்.
தமிழ்க் கவிதை உலகில் முப்பத்து மூன்று ஆண்டு காலம் உலா வந்து, ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதிக் குவித்தவர் கவிஞர் கண்ணதாசன். நான்காயிரம் கவிதைகள், ஐயாயிரம் திரைப்படப் பாடல்கள் படைத்தவர். தேசிய விருது, சாகித்ய அகாதமி விருது என பல பெருமைக்குரிய விருதுகள் பெற்றவர்.
சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற நுால்களை எழுதியவர்.
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24ல் சிகாகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்., 17ல் இறந்தார். அக்., 20ல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்.,22ல் தகனம் செய்யப்பட்டது.
கதை வசனம் எழுதிய படங்கள் : மதுரை வீரன், நானே ராஜா, ராஜா தேசிங்கு, மகாதேவி, மாலையிட்ட மங்கை, கருப்புப் பணம், தெனாலி ராமன், தெய்வத் திருமணங்கள், மன்னாதி மன்னன், இல்லற ஜோதி
கவிஞர் கண்ணதாசன் எழுத்துப் பணி பற்றிய குறிப்புகள்
முதல் இலக்கிய பணி : 1952 - 53ல் டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தின் போது சிறை சென்று, சிறையில் எழுதிய "மாங்கனி".
நாவல்கள் : "அவள் ஒரு இந்துப் பெண்", "சிவப்புக் கல் மூக்குத்தி", "ரத்த புஷ்புங்கள்", "ஸ்வர்ண சரஸ்வதி", "நடந்த கதை", "மிசா", "ஸ்ருதி சேராத ராகங்கள்", "முப்பது நாளும் பௌர்ணமி", "அரங்கமும் அந்தரங்கமும்", "ஆயிரம் தீவு அங்கயர்கன்னி", "தெய்வத் திருமணங்கள்", "ஆயிரம்கால் மண்டபம்", "காதல் கொண்ட தென்னாடு", "அதைவிட ரகசியம்", "ஒரு கவிஞனின் கதை", "சிங்காரி பார்த்த சென்னை", "விளக்கு மட்டுமா சிவப்பு", "வனவாசம்", 'பிருந்தாவனம்".
சுயசரிதை : "எனது வசந்த காலங்கள்", "எனது சுயசரிதம்".
கட்டுரைகள் : "கடைசி பக்கம்", "போய் வருகிறேன்", "அந்தி சந்தி அர்த்தஜாமம்", "நான் பார்த்த அரசியல்;", "எண்ணங்கள்", "வாழ்க்கை எனும் சோலையிலே", "குடும்;ப சுகம்", "ஞானாம்பிகா", "ராகமாலிகா", "இலக்கியத்தில் காதல்", "தோட்டத்து மலர்கள்", "இலக்கிய யுத்தங்கள்".
நாடகங்கள் : "அனார்கலி", "சிவகங்கை சீமை", "ராஜ தண்டனை".
பாடல்கள் : "கண்ணதாசன் கவிதைகள்" 6 தொகுதி, "திரைப்பாடல்கள்" 2 தொகுதி, "பாடிக் கொடுத்த மங்கலங்கள்", "கவிதாஞ்சலி","தாய்பபாவை", "ஸ்ரீ கிருஷ்ண கவசம்", "அவளுக்கொரு பாடல்", "முற்று பெறாத காவியங்கள்", "பஜகோவிந்தம்", "கிருஷ்ண அந்தாதி", "கிருஷ்ண கானம்".
டூயட்
கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
S.No. | பாடல் | படம் | இசைஅமைப்பாளர் |
---|---|---|---|
1 | கண்மூடும் வேலையிலும் கலை என்ன | மகாதேவி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
2 | கனிய கனிய மழலை பேசும் கண்மனி | மன்னாதி மன்னன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
3 | நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் | பாலும் பழமும் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
4 | மலர்ந்தும் மலராத பாதி மலர் போல | பாசமலர் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
5 | வாழ நினைத்தால் வாழலாம் | பலே பாண்டியா | எம்.எஸ்.விஸ்வநாதன் |
6 | வளர்ந்த கலை மறந்துவிட்டாள் | காத்திருந்த கண்கள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
7 | பூஜைக்கு வந்த மலரே வா | பாதகாணிக்கை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
8 | பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை | படித்தால் மட்டும் போதுமா | எம்.எஸ்.விஸ்வநாதன் |
9 | கொடி அசைந்ததும் காற்று வந்ததா | பார்த்தால் பசி தீரும் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
10 | பால்வண்ணம் பருவம் கண்டு | பாசம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
11 | இந்த மன்றத்தில் ஓடி வரும் | போலீஸ்காரன் மகள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
12 | ரோஜா மலரே ராஜகுமாரி | வீரத்திருமகன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
13 | பனியில்லாத மார்கழியா | ஆனந்த ஜோதி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
14 | அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை | நெஞ்சம் மறப்பதில்லை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
15 | மதுரா நகரில் தமிழ் சங்கம் | பார் மகளே பார் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
16 | பேசுவது கிளியா | பணத்தோட்டம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
17 | அன்று வந்ததும் அதே நிலா | பெரிய இடத்துப் பெண் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
18 | அமைதியான நதியினிலே ஓடம் | ஆண்டவன் கட்டளை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
19 | யாரது யாரது தங்கமா | என் கடமை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
20 | தங்கரதம் வந்தது வீதியிலே | கலைக்கோயில் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
21 | இரவும் நிலவும் வளரட்டுமே | கர்ணன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
22 | நாளாம் நாளாம் திருநாளாம் | காதலிக்க நேரமில்லை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
23 | அனுபவம் புதுமை | காதலிக்க நேரமில்லை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
24 | என்னப் பார்வை உந்தன் பார்வை | காதலிக்க நேரமில்லை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
25 | தூது செல்ல ஒரு தோழி இல்லை என | பச்சை விளக்கு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
26 | பறக்கும் பந்து பறக்கும் | பணக்கார குடும்பம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
27 | போக போக தெரியும் | சர்வர் சுந்தரம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
28 | நாணமோ இன்னும் நாணுமோ | ஆயிரத்தில் ஒருவன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
29 | பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் | பணம் படைத்தவன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
30 | ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் | பழனி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
31 | உலகம் எங்கும் ஒரே மொழி | நாடோடி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
32 | கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா | பறக்கும் பாவை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
33 | முத்துக்களோ கண்கள் | நெஞ்சிருக்கும்வரை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
34 | பூமாலையில் ஓர் மல்லிகை | ஊட்டி வரை உறவு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
35 | அங்கே மாலை மயக்கம் யாருக்காக | ஊட்டி வரை உறவு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
36 | சின்னவளை முகம் சிவந்தவளை | புதிய பூமி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
37 | இயற்கை என்னும் இளைய கன்னி | சாந்தி நிலையம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
38 | ஒரு நாளிலே உறவானதே | சிவந்த மண் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
39 | ஒரு ராஜா ராணியிடம் | சிவந்த மண் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
40 | மங்கையரில் மகராணி | அவளுக்கென்று ஓர் மனம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
41 | பொட்டு வைத்த முகமோ | சுமதி என் சுந்தரி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
42 | மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி | உத்தரவின்றி உள்ளே வா | எம்.எஸ்.விஸ்வநாதன் |
43 | காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ | உத்தரவின்றி உள்ளே வா | எம்.எஸ்.விஸ்வநாதன் |
44 | பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே | தர்மம் எங்கே | எம்.எஸ்.விஸ்வநாதன் |
45 | யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே | கௌரவம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
46 | மதன மாளிகையில் | ராஜபார்ட் ரங்கதுரை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
47 | பொன்னான மனம் எங்கு போகின்றதோ | திருமாங்கல்யம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
48 | விழியே கதை எழுது | உரிமைக்குரல் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
49 | அன்பு நடமாடும் கலைக்கூடமே | அவன்தான் மனிதன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
Advertisement |
|||
50 | காதல் ராஜ்ஜியம் எனது | மன்னவன் வந்தானடி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
51 | வசந்த கால நதியினிலே வைரமணி நீரலைகள் | மூன்று முடிச்சு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
52 | இலக்கணம் மாறுதோ | நிழல் நிஜமாகிறது | எம்.எஸ்.விஸ்வநாதன் |
53 | நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் | அந்தமான் காதலி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
54 | கங்கை யமுனை இங்குதான் சங்கமம் | இமயம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
55 | பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா | நினைத்தாலே இனிக்கும் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
56 | இனிமை நிறைந்த உலகம் இருக்கு | நினைத்தாலே இனிக்கும் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
57 | வீணை சிரிப்பில் ஆசை அணைப்பில் | நூல் வேலி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
58 | திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே | திரிசூலம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
59 | இரவும் பகலும் எனக்கு உன்மேல் கண்ணோட்டம் | பில்லா | எம்.எஸ்.விஸ்வநாதன் |
60 | அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன் | பொல்லாதவன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
61 | சிப்பி இருக்குது முத்தும் இருக்குது | வறுமையின் நிறம் சிவப்பு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
62 | தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த | அந்த 7 நாட்கள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
63 | விடிய விடிய சொல்லி தருவேன் | போக்கிரி ராஜா | எம்.எஸ்.விஸ்வநாதன் |
64 | ஆட்டுக்குட்டி முட்டையிட்டு | 16 வயதினிலே | இளையராஜா |
65 | புலவர் சொன்னதும் பொய்யே | ஆயிரம் பொய் | வி.குமார் |
66 | மடி மீது தலை வைத்து | அன்னை இல்லம் | கேவி மகாதேவன் |
67 | இறைவன் இருக்கிறானா | அவன் பித்தனா | ஆர் பார்த்தசாரதி |
68 | இது மாலை நேரத்து மயக்கம் | தரிசனம் | சூலமங்கலம் ராஜலட்சுமி |
69 | தொட்டு விட தொட்டு விட | தர்மம் தலைகாக்கும் | கேவி மகாதேவன் |
70 | ஹலோ ஹலோ சுகமா | தர்மம் தலைகாக்கும் | கேவி மகாதேவன் |
71 | முத்தங்கள் நூறு | எங்கள் தங்க ராஜா | கேவி மகாதேவன் |
72 | இரவுக்கும் பகலுக்கும் | எங்கள் தங்க ராஜா | கேவி மகாதேவன் |
73 | நேருக்கு நேர் நின்று | எதிரிகள் ஜாக்கிரதை | வேதா |
74 | எனக்கொரு ஆசை | எதிரிகள் ஜாக்கிரதை | வேதா |
75 | பெயரை சொல்லவா | குரு | இளையராஜா |
76 | நீ போகும் இடமெல்லாம் | இதய கமலம் | கேவி மகாதேவன் |
77 | தோள் கண்டேன் தோழி கண்டேன் | இதய கமலம் | கேவி மகாதேவன் |
78 | புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் | இரு கோடுகள் | வி.குமார் |
79 | நான் மலரோடு தனியாக | இரு வல்லவர்கள் | வேதா |
80 | திருமகள் தேடி வந்தாள் | இருவர் உள்ளம் | கேவி மகாதேவன் |
81 | நதி எங்கே போய்கிறது | இருவர் உள்ளம் | கேவி மகாதேவன் |
82 | தாலாட்டுதே வானம் | கடல் மீன்கள் | இளையராஜா |
83 | கண்களின் வார்த்தைகள் | களத்தூர் கண்ணம்மா | ஆர் சுதர்சனம் |
84 | இளமை நாட்டிய சாலை | கல்யாணமாம் கல்யாணம் | விஜய பாஸ்கர் |
85 | திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் | கந்தன் கருணை | கேவி மகாதேவன் |
86 | ஓடம் கடலோடும் | கண்மணி ராஜா | எம்எஸ் விஸ்வநாதன் |
87 | மேகமே தூதாக வா | கண்ணன் ஒரு கை குழந்தை | இளையராஜா |
88 | சின்ன சின்ன கண்ணனுக்கு | காட்டு ரோஜா | கேவி மகாதேவன் |
89 | கட்டான்னா கண்ணழகு கண்ணா | குடும்பத் தலைவன் | கேவி மகாதேவன் |
90 | தூங்காத கண்ணின்று ஒன்று | குங்குமம் | கேவி மகாதேவன் |
91 | தொட்டு கொள்ளவா | மாட்டுக்கார வேலன் | கேவி மகாதேவன் |
92 | பூ வைத்து பூ வைத்து | மாட்டுக்கார வேலன் | கேவி மகாதேவன் |
93 | பால் பொங்கும் பருவம் | மனிதனும் தெய்வங்களும் | குன்னக்குடி வைத்தியநாதன் |
94 | சின்னஞ்சிறு வயதில் | மீண்டும் கோகிலா | இளையராஜா |
95 | ராதே என் ராதே நீ எங்கே | மீண்டும் கோகிலா | இளையராஜா |
96 | சங்கீதம் ராகங்கள் | மோகம் முப்பது வருஷம் | விஜய பாஸ்கர் |
97 | காதலன் வந்தான் | மூன்றெழுத்து | டிகே ராமமூர்த்தி |
98 | மஞ்சள் நிலவுக்கு இன்று | முதலிரவு | இளையராஜா |
99 | போதுமா இந்த இடம் | நான் | டிகே ராமமூர்த்தி |
100 | பூ போல பூ போல பிறக்கும் | நானும் ஒரு பெண் | ஆர் சுதர்சனம் |
101 | நீ தொட்டால் எங்கும் | நல்ல நேரம் | கேவி மகாதேவன் |
102 | சிந்து நதிக்கரை ஓரம் | நல்லதோர் குடும்பம் | இளையராஜா |
103 | மான் அள்ளவோ கண்கள் | நீதிக்கு பின் பாசம் | கேவி மகாதேவன் |
104 | ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் | நீயா | சங்கர் கணேஷ் |
105 | ராமனின் மோகனம் | நெற்றிக்கண் | இளையராஜா |
106 | ஆயிரம் மலர்களே | நிறம் மாறாத பூக்கள் | இளையராஜா |
107 | நான் பேச வந்தேன் | பாலூட்டி வளர்த்த கிளி | இளையராஜா |
108 | என்ன என்ன நினைக்குது | பரிசு | கேவி மகாதேவன் |
109 | எங்கெங்கோ செல்லும் | பட்டாகத்தி பைரவன் | இளையராஜா |
110 | தேவதை ஒரு தேவதை | பட்டாகத்தி பைரவன் | இளையராஜா |
111 | அந்த சிவகாமி மகனிடம் | பட்டணத்தில் பூதம் | ஆர்.கோவர்தனம் |
112 | தேன் சிந்தும் வானம் | பொண்ணுக்கு தங்க மனசு | ஜிகே வெங்கடேஷ் |
113 | நாதஸ்வர ஓசையிலே | பூவும் பொட்டும் | ஆர்.கோவர்தனம் |
114 | வான் மேகங்களே | புதிய வார்ப்புகள் | இளையராஜா |
115 | நேரமிது நேரமிது | ரிஷி மூலம் | இளையராஜா |
116 | ஒருத்தி ஒருவனை | சாரதா | கேவி மகாதேவன் |
117 | ஆழக் கடலில் தேடிய | சட்டம் என் கையில் | இளையராஜா |
118 | இந்த மின்மினிக்கு | சிகப்பு ரோஜாக்கள் | இளையராஜா |
119 | சிரித்து சிரித்து | தாய் சொல்லை தட்டாதே | கேவி மகாதேவன் |
120 | ஒரே முறை தான் | தனிப்பிறவி | கேவி மகாதேவன் |
121 | கன்னத்தில் என்னடி காயம் | தனிப்பிறவி | கேவி மகாதேவன் |
122 | ஓ ஹோ எந்தன் பேபி | தேனிலவு | ஏஎம் ராஜா |
123 | நிலவும் மலரும் | தேனிலவு | ஏஎம் ராஜா |
124 | என்னருகே நீ இருந்தால் | திருடாதே | எஸ்எம் சுப்பையா நாயுடு |
125 | தேன் மல்லி பூவே | தியாகம் | இளையராஜா |
126 | தேவன் தந்த வீணை | உன்னை நான் சந்தித்தேன் | இளையராஜா |
127 | இறைவன் இரண்டு பொம்மைகள் | உயர்ந்தவர்கள் | சங்கர் கணேஷ் |
128 | ஆண் கவியை வெல்ல வந்த | வானம்பாடி | கேவி மகாதேவன் |
129 | ஏட்டில் எழுதி வைத்தேன் | வானம்பாடி | கேவி மகாதேவன் |
130 | இரு மாங்கனி போல் இதழ் | வைரம் | டிஆர் பாப்பா |
131 | மனம் எண்ணும் மேடை மேலே | வல்லவனுக்கு வல்லவன் | வேதா |
132 | இன்னும் பார்த்து கொண்டிருந்தால் | வல்லவன் ஒருவன் | வேதா |
133 | சிப்பி இருக்குது | வறுமையின் நிறம் சிகப்பு | எம்எஸ் விஸ்வநாதன் |
134 | மயக்கம் என்ன | வசந்த மாளிகை | கேவி மகாதேவன் |
135 | குடி மகனே | வசந்த மாளிகை | கேவி மகாதேவன் |
136 | பார்த்தேன் சிரித்தேன் | வீர அபிமன்யூ | கேவி மகாதேவன் |
137 | ரோஜா மலரே | வீர திருமகன் | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
138 | மஞ்சள் முகமே வருக | வேட்டைக்காரன் | கேவி மகாதேவன் |
139 | மெதுவா மெதுவா தொடலாமா | வேட்டைக்காரன் | கேவி மகாதேவன் |
140 | பாலாக்காட்டு பக்கத்திலே | வியட்நாம் வீடு | கேவி மகாதேவன் |
141 | பார்வை ஒன்றே போதுமே | யார் நீ | வேதா |
142 | ஏணுங்க மாப்பிள்ளை | ஏணிப்படிகள் | கேவி மகாதேவன் |
சோலோ
கண்ணதாசனின் தனிப்பாடல்கள்
S.No. | பாடல் | படம் | இசைஅமைப்பாளர் |
---|---|---|---|
1 | எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன் | பணம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
2 | செந்தமிழ் தேன்மொழியாள் | மாலையிட்ட மங்கை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
3 | தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் | பாகப்பிரிவினை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
4 | அச்சதம என்பது மடமையடா | மன்னாதி மன்னன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
5 | மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் | பாக்கியலக்ஷ்மி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
6 | உடலுக்கு உயிர் காவல் | மணப்பந்தல் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
7 | ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் | பாலும் பழமும் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
8 | காலங்களில் அவள் வசந்தம் | பாவமன்னிப்பு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
9 | அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் | பாவமன்னிப்பு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
10 | தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே | ஆலயமணி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
11 | ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே | காத்திருந்த கண்கள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
12 | சொன்னது நீதானா சொல் சொல் என் உயிரே | நெஞ்சில் ஓர் ஆலயம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
13 | பாவாடை தாவணியில் பார்த்த உருவமா | நிச்சய தாம்பூலம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
14 | ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி | பாசம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
15 | நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் | போலீஸ்காரன் மகள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
16 | மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா | சுமைதாங்கி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
17 | நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா | ஆனந்த ஜோதி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
18 | தேவன் கோயில் மணி ஓசை | மணி ஓசை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
19 | நெஞ்சம் மறப்பதில்லை | நெஞ்சம் மறப்பதில்லை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
Advertisement |
|||
20 | பார் மகளே பார் பார் மகளே பார் | பார் மகளே பார் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
21 | ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை | பணத்தோட்டம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
22 | ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு | ஆண்டவன் கட்டளை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
23 | ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ | கை கொடுத்த தெயவம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
24 | உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது | கர்ணன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
25 | கண்ணுக்கு குலமேது | கர்ணன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
26 | என்னுயிர்த் தோழி கேளொரு சேதி | கர்ணன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
27 | கண்கள் எங்கே | கர்ணன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
28 | அம்மம்மா கேளடி தோழி | கருப்பு பணம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
29 | ஆடவரெல்லாம் ஆடவரலாம் | கருப்பு பணம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
30 | கேள்வி பிறந்தது அன்று | பச்சை விளக்கு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
31 | தரைமேல் பிறக்க வைத்தான் | படகோட்டி | வாலி |
32 | உன்னை ஒன்று கேட்பேன் | புதிய பறவை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
33 | பார்த்த ஞாபகம் இல்லையோ | புதிய பறவை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
34 | எங்கே நிம்மதி | புதிய பறவை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
35 | கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் | ஆனந்தி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
36 | காதல் நிலவே கண்மனி ராதா | ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
37 | இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் | ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
38 | அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் | ஆயிரத்தில் ஒருவன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
39 | ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ | ஆயிரத்தில் ஒருவன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
40 | ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே | நீலவானம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
41 | யார் அந்த நிலவு | சாந்தி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
42 | உன்னைத்தான் நானறிவேன் | வாழ்க்கைப்படகு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
43 | சின்ன சின்ன கண்ணனுக்கு | வாழ்க்கைப்படகு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
44 | கண்ணன் என்னும் மன்னன் பேரை | வெண்ணிற ஆடை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
45 | அம்மம்மா காற்று வந்து | வெண்ணிற ஆடை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
46 | என்ன என்ன வார்த்தைகளோ | வெண்ணிற ஆடை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
47 | மௌனமே பார்வையால் ஒரு பாட்டு | கொடிமலர் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
48 | நிலவே என்னிடம் நெறுங்காதே | ராமு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
49 | தேடினேன் வந்தது | ஊட்டி வரை உறவு | எம்.எஸ்.விஸ்வநாதன் |
50 | கேட்டவரெல்லாம் பாடலாம் | தங்கை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
51 | முத்து நகையே உன்னை நானறிவேன் | என் தம்பி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
52 | எங்கே நான் வாழ்ந்தாலும் | கல்லும் கனியாகும் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
53 | தை மாத மேகம் அது தரையில் ஆடுது | குழந்தைக்காக | எம்.எஸ்.விஸ்வநாதன் |
54 | ராமன் எத்தனை ராமனடி | லக்ஷ்மி கல்யாணம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
55 | கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா | தெய்வமகன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
56 | கடவுள் ஒரு நாள் உலகை காண | சாந்தி நிலையம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
57 | பட்டத்து ராணி பார்க்கும் பார்வை | சிவந்த மண் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
58 | நான் உன்னை அழைக்கவில்லை | எங்கிருந்தோ வந்தாள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
59 | ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு | காவியத்தலைவி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
Advertisement |
|||
60 | அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு | ராமன் எத்தனை ராமனடி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
61 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | அவளுக்கென்று ஓர் மனம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
62 | வசந்தத்தில் ஓர் நாள் | மூன்று தெய்வங்கள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
63 | சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு | சவாலே சமாளி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
64 | இசை கேட்டால் புவி அசைந்தாடும் | தவப்புதல்வன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
65 | பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது | சூரியகாந்தி | எம்.எஸ்.விஸ்வநாதன் |
66 | அவள் ஒரு நவரச நாடகம் | உலகம் சுற்றும் வாலிபன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
67 | தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு | அவள் ஒரு தொடர்கதை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
68 | அதிசய ராகம் ஆனந்த ராகம் | அபூர்வ ராகங்கள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
69 | ஆட்டுவித்தார் யாரொருவர் | அவன்தான் மனிதன் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
70 | நாதமெனும் கோவிலிலே | மன்மத லீலை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
71 | மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் | மன்மத லீலை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
72 | கம்பன் ஏமாந்தான் | நிழல் நிஜமாகிறது | எம்.எஸ்.விஸ்வநாதன் |
73 | அங்கும் இங்கும் | அவர்கள் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
74 | வான் நிலா நிலா அல்ல | பட்டினப்பிரவேசம் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
75 | எங்கேயும் எப்போதும் சங்கீதம் சங்தோஷம் | நினைத்தாலே இனிக்கும் | எம்.எஸ்.விஸ்வநாதன் |
76 | ராகங்கள் பதினாறு உருவான வரலாறு | தில்லு முல்லு | எம்.எஸ்.விஸ்வநாதன் |