18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
பராகான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் என பாலிவுட்டில் அடுத்தடுத்து இறந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று(ஜூலை 3) காலமானார்.
கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடன இயக்குநராக இருப்பவர் சரோஜ் கான். 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இதில் ஒரு விருது, தமிழில் அதிதிராவ் நடித்த சிருங்காரம் என்ற படத்திற்காக கிடைத்தது. குறிப்பாக மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆகியோரின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக இவர் தான்.
சரோஜ்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையின் பாந்த்ராவில் இருக்கும் குருநானக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது. இருப்பினும் சுவாசக்கோளாறு பிரச்னைக்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகைனா கான் என்ற மகளும் உள்ளனர். கொரோனாவால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு காலையிலேயே மும்பை புறநகர் மாலட் பகுதியில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அம்மாவின் மறைவுக்கு மூன்றுநாட்கள் இரங்கல் கூட்டம் நடக்கும் என சரோஜ்கானின் மகள் சுகைனா கான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சரோஜ்கானின் மறைவுக்கு பாலிவுட்டின் பல பிரபலங்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.