‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தபாங்' படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து, தற்போது மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த மூன்றாவது பாகத்தை நடிகர் பிரபுதேவா இயக்குகிறார். சோனாக்ஷி சின்கா சல்மான்கானின் மனைவியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்களில் சோனு சூட், பிரகாஷ்ராஜ் ஆகியோர் வில்லனாக நடித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்தில் நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க இருக்கிறார். படத்தில் இவர் ரியல் எஸ்டேட் மாபியா தலைவனாக நடிக்கிறார்.
நிலங்களை அநியாயமாக அபகரிக்கும் கும்பலுக்கும், அதிரடி போலீஸ் அதிகாரியான சல்மான்கானுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த படத்தின் கதையே. சல்மான்கான் மற்றும் சுதீப் கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மே மாதத்தில் இதன் படப்பிடிப்பில் சுதீப் கலந்து கொள்வார் என தெரிகிறது.