'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
பிரபல இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. தமிழ் படங்களிலும் நடித்து, தமிழ் பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர். அவருக்கு திடீரென கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடைந்து போன நிலையில் இருந்த மனிஷாவை தேற்றி, சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டதில், கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார்.
பின், இந்தியாவுக்குத் திரும்பிய அவர், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். மீண்டும் பிஸியான நடிகையாகி இருக்கும் மனிஷா, தன்னுடைய வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினார். குறிப்பாக, தான் கேன்சர் பாதிப்புகளில் இருந்து மீண்டது குறித்தெல்லாம் புத்தகம் எழுத முடிவெடுத்து, 'healed' என்ற தலைப்பில், தெளிவாக எழுதி இருக்கிறார். அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கைக் குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். அதில், அவர் எழுதி இருப்பதாவது:
இடைவிடாமல் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தேன். நடிப்பு... நடிப்பு... நடிப்பு இவை தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியவில்லை. ஒரே ஓட்டமாக ஓடியதால், உள்ளமும்; உடலும் பலவீனப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் ஓடினேன். பின், ஒரு கட்டத்தில், கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஓய்வில்லாமல் சினிமாவில் ஓடியதால், உலகமே என் காலடிக்கு கீழே இருப்பதை போன்றே உணர்ந்தேன். பின் தான், அதெல்லாமே மாயை என்று உணர்ந்தேன். தற்போது, கேன்சர் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டாலும், ஒரு விதத்தில், அது என் அகந்தையை இல்லாமல் செய்து விட்டது.
இவ்வாறு மனிஷா கொய்ராலா புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.