தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால். இவர், மும்பையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை 90 நாட்களில் திருப்பித் தந்து விடுவதாகவும், 12 சதவிகித வட்டி தருவதாகவும் ஒப்புதல் அளித்திருப்பதோடு வட்டியுடன் சேர்ந்த தொகைக்கு காசோலையும் அளித்துள்ளார்.
கடனுக்கான காலக்கெடு முடிந்ததும், அந்த நிறுவனம் அர்ஜுன் ராம்பால் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியது. ஆனால், பணமில்லை என்று காசோலை திரும்பி வந்தது. இதனால், அந்த நிறுவனம் அர்ஜுன் ராம்பால் மீது பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் நேற்று அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு, பரபரப்பு கிளம்பியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் தயாரிப்பாளர் பிரான் அரோரோ இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது,