தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் இயக்குனர் ஷங்கரும், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறுவார்கள். சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமௌலியிடம், அந்த நிகழ்ச்சியை நடத்திய பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், இதே பாலிவுட்டில் உங்களைப் போன்று சினிமாவைப் பார்க்க கூடிய குணாதிசயம் கொண்ட இயக்குனர் யார் என ஒரு கேள்வியை முன் வைத்தார்
அதற்கு ராஜமவுலி சற்றும் யோசிக்காமல் அப்படி யாரும் இல்லை என பதில் கூறி கரண் ஜோஹரை மட்டுமல்ல, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரையும் அதிர வைத்தார். பொதுவாக இதுபோன்ற கேள்விகளுக்கு யாராக இருந்தாலும் சமாளிப்பாக ஏதோ ஒரு பதிலை கூறுவது தான் வழக்கம் ஆனால் ராஜமவுலியை, இப்படி ஒரு பதிலை கூற வைத்தது அவரது கர்வமா இல்லை தன்னம்பிக்கையா அவருக்கே வெளிச்சம்