மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் வீணை எஸ்.பாலச்சந்தர் திகில் படங்கள் எடுத்து பிரபலமானவர். அவரைப்போன்றே ஹிந்தியில் திகில் படங்கள் எடுத்து திகில் பட மன்னன் என்று புகழப்பட்டவர் துளசி ராம்சே. 80களில் இவர் எடுத்த திகில் படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. ஹோட்டல் புரானா, மந்திர், தக்கானா, வீரானா, பந்த் தர்வாஸா, போன்றவை முக்கியமான படங்கள்.
முதுமை காரணமாக சினிமா விட்டு விலக்கிய துளசி ராம்சே, மும்பை அந்தேரி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 77. துளசி ராம்சே உடலுக்கு இந்தி திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.