'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரெட் சில்லீஸ் என்ற படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தவர் லினா மரியபால். அதன் பிறகு ஹஸ்பண்ட் இன் கோவா, கோப்ரா உள்பட பல படங்களில் நடித்தார். பாலிவுட் படமான மெட்ராஸ் கஃபே படத்திலும் நடித்தார். லினா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கனரா வங்கியில் 19 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போதும் அந்த வழக்கு நடந்து வருகிறது.
லினா கொச்சியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்று மாலை பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், பியூட்டி பார்லரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டுச் சென்றனர். இதனால் பார்லருக்குள் இருந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரைந்து வந்து துப்பாக்கி குண்டுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: லினாவுக்கு மும்பையில் உள்ள சில மாபியாக்களுடன் தொடர்பு இருக்கிறது. ஒரு மாபியா கும்பலின் தலைவன் ரவி புஜாரா என்பவன் லினாவிடம் 25 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளான். அவர் தர மறுத்துள்ளார், இதனால் அவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். இதுகுறித்து லினா கொச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்த ரவி புஜாரா லினாவுக்கு பயத்தை ஏற்படுத்துவற்காக இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நிகழ்த்தி உள்ளான். பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் காவல்துறையும் அதிர்ச்சி அடைந்துள்ளது. என்கிறது போலீஸ் தரப்பு.