இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டிற்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலின் டாப் 5 பட்டியலில், முதன்முறையாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து 3வது முறையாக இடம் பிடித்து உள்ளார். இவரது வருமானம் ரூ.252.25 கோடி. கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி 2வது இடம் பிடித்துள்ளார். இவரது வருமானம் ரூ.228.09 கோடி. அக்ஷய் குமார் ரூ.185 கோடி வருமானத்துடன் 3வது இடத்தில் உள்ளார்.
ரூ.112.8 கோடி வருமானத்துடன் தீபிகா படுகோனே 4வது இடத்திலும், தோனி ரூ.101.77 கோடி வருமானத்துடன் 5 வது இடத்திலும் உள்ளார்.
2017ல் 21 பெண்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 2018ல் இது 18 ஆக குறைந்துள்ளது. இருந்த போதிலும் டாப் 5 பட்டியலில் தீபிகா இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் போப்ஸ் டாப் 5 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் பெண் என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார்.